டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக நாச்சிகுளத்தில் மறியல்! மஜக மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜூதீன் கைது!!


டிச.08,

டெல்லியில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக நாடுதழுவிய அளவில் இன்று நடைபெறும் பொதுவேலை நிறுத்த போராட்டத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவளித்திருந்தது.

அதனடிப்படையில் இன்று பந்த் ஐ மீறி நடைப்பெற்ற பேருந்து போக்குவரத்தை நிறுத்தக் கோரி நாச்சிகுளத்தில் அனைத்து கட்சி மற்றும் சங்கங்களின் சார்பில் மறியல் நடைபெற்றது.

இம்மறியலில் மஜக சார்பில் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜூதீன் தலைமையில் மஜகவினர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் செல்வராஜ் MP கலந்து கொண்டு போராட்டத்தின் நோக்கம் குறித்து உரையாற்றினார்.

இதில், திமுக சார்பில் CN பழனிவேல், சுப்பிரமணியன், அன்வர் அலி, CPIயின் ஒன்றிய செயலாளர் முருகையன், CPI(M) யின் ஒன்றிய செயலாளர் பாலசுப்ரமணியன் மற்றும் அனைத்துக்கட்சி தொண்டர்கள் உட்பட கலந்து கொண்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#திருவாரூர்_மாவட்டம்.