மஜக மேலப்பாளையம் பகுதியில் கபசுரக் குடிநீர் விநியோகம்.!


நெல்லை.செப்.06.,

மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக் குடிநீரை தமிழகம் முழுவதும் போர்கால அடிப்படையில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் பொதுமக்களுக்கு விநியோகித்து வருகின்றனர்.

அதன் ஒரு நிகழ்வாக மஜக நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் பகுதி சார்பில் பகுதி செயலாளர் தமீம் அன்சாரி தலைமையில் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

MJTS மாவட்டச் செயலாளர் நாகூர்மீரான் மற்றும் மேலப்பாளையம் நகர நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,

மஜக நெல்லை மாவட்டச் செயலாளர் நெல்லை நிஜாம், தலைமை செயற்குழு உறுப்பினர் இக்பால், மாவட்ட மனித உரிமை பாதுகாப்பு அணி செயலாளர் அப்பாஸ், மாவட்ட மருத்துவசேவை அணி செயலாளர் புகாரி, நெல்லை பகுதி பொருளாளர் பீர், பகுதி துணை செயலாளர் அலாவுதீன், MJTS மேலப்பாளையம் நகர செயலாளர் மைதீன், MJTS பேட்டை நகர செயலாளர் ஹபிபுல்லாஹ், பேட்டை நகர பொருளாளர் அசன் கனி, துணை செயலாளர் சம்சு, பேட்டை நகர மனித உரிமை பாதுகாப்பு அணி செயலாளர் முருகேசன் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கபசூர குடிநீரை வழங்கினர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை மேலப்பாளையம் பகுதியை சார்ந்த சுடலை, ரவி, முஜாகித் அலி, தாரிக் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நெல்லை_மாவட்டம்
06-09-2020