கருப்புசட்டத்திற்கு எதிராக மனித சங்கிலி…! எஸ்எஸ்ஹாரூன் ரசீது பங்கேற்பு..!!

சென்னை.ஜனவரி.30..,

அனைத்து இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பான தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் அறிவிக்கப்பட்ட மனித சங்கிலி போராட்டம் தமிழகம் முழுவதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது பல லட்சக்கணக்கான மக்கள் பங்கெடுத்த இந்த போராட்டம் மிகப்பெரிய வெற்றியை கண்டது.

மனிதநேய ஜனநாயக கட்சி மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது தலைமையில் இளையான்குடி வட்டார முஸ்லிம் ஜமாத் தலைவர் நசீர் கான், இமாம் முஹம்மது மைதீன் உலவி மற்றும் ஈத்கா பள்ளிவாசல் இமாம் முஹம்மது ஹூஸைன் காஸிமி ஆகியோர் முன்னிலையில் நூற்றுக்கணக்கான சகோதரர்கள் ஊர்வலமாக அணிவகுத்து சென்று சென்னை பிராட்வேயில் நடைபெற்ற மனிதச் சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

மக்களை மத நீதியாக பிரிக்காதே, CAA கருப்பு சட்டத்தை திரும்பப் பெறு, NRC, NPR கணக்கெடுப்பு நடத்தாதே உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மஜக பொருளாளருடன் மாநில துணைச் செயலாளர்கள் புதுமடம் அனிஸ், பொறியாளர் சைஃபுல்லா, துறைமுகம் பகுதிச் செயலாளர் ஹாஜி, பொருளாளர் குப்பை சீனி, துணைச் செயலாளர்கள் அஸ்கர் அலி, முஹம்மது அலி, மற்றும் துறைமுகம் சிக்கந்தர், அம்ஜத், 56-வது வார்டுச் செயலாளர் தாஹா ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சென்னை
30-01-2020