நாகை.ஜூன்.03., இன்று மனிதநேய ஜனநாயக கட்சி வேதாரண்யம் நகரத்தின் சார்பில் தோப்புத்துறையில் மாற்று மத சகோதரர்களுக்காக நோன்பு கஞ்சி விநியோகம் ஏற்பாடு செய்யப்பட்டது . சமூக நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிகழ்வு அமைந்தது . சுமார் 300க்கும் மேற்பட்டவர்களுக்கு நோன்பு கஞ்சி, குளிர்பானம் வழங்கப்பட்டது . இந்நிகழ்ச்சிக்கு வேதை நகரச் செயலாளர் ஷேக் அகமதுல்லாஹ் தலைமை தாங்கினார்.மற்றும் ஏனைய நிர்வாகிகள் , உறுப்பினர்களும் கலந்து கொண்டு நோன்பு கஞ்சி விநியோகித்தனர் . தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி #MJK_IT_WING வேதாரண்யம் - நகரம் நாகை தெற்கு மாவட்டம் 03_06_17
தமிழகம்
தமிழகம்
கடலூரில் தபால் நிலையத்திற்கு பூட்டு… மஜக மாநில பொருளாளர் கைது…
கடலூர்.ஜூன்.03., இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் கடலூர் மாவட்டம் சார்பில் மாடுகள், ஒட்டகங்கள் இறைச்சிக்காக விற்க்கப்படுவதில் கட்டுப்பாடுகள் விதித்த மத்தியில் ஆளும் பாசிச பாஜக அரசை கண்டித்து கடலூர் தபால் நிலையம் முற்றுகையிட்டு பூட்டு போடும் போராட்டம் மற்றும் சட்ட நகல் எரிக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் மஜக மாநில பொருளாளர் SS.ஹாரூன் ரசீது M.com தலைமையில் நடைபெற்றது. மிருகவதை தடை சட்டத்தில் திருத்தம் செய்யக்கோரியும், இறைச்சிக்காக மாடுகள், ஒட்டகங்கள் விற்க்கப்படுவதில் கட்டுப்பாடுகள் விதித்ததை மத்திய அரசு திரும்பப்பெறக் கோரியும், சென்னை IIT மாணவன் சூராஜ் தாக்கப்பட்டத்தை கண்டித்தும், சூராஜ்ஜை தாக்கிய ABVP குண்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும் இப்போராட்டத்தில் கடலூர் மஜக மாவட்ட செயலாளர் N.இப்ராஹிம், மாநில செயற்குழு உறுப்பினர் P.ஷாஜஹான், மாநில தலைமை கழக பேச்சாளர் கடலூர் மன்சூர், மாவட்ட துணை செயலாளர்கள் அஜ்மீர்கான், அஜிஸ், மாவட்ட மாணவர் இந்தியா செயலாளர் ரியாஸ் ரஹ்மான், இளைஞரணி துணை செயலாளர் மன்சூர், மாவட்ட மீணவரணி செயலாளர் சேட், கடலூர் நகர செயலாளர் இலியாஸ், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் சிராஜ், நெய்வேலி நகர
கவிக்கோ இறுதி நிகழ்வில் மஜக தலைவர்கள் பங்கேற்பு…
சென்னை.ஜூன்.03., இன்று கவிக்கோ.அப்துல் ரஹ்மான் அவர்களின் ஜனாசா இறுதி தொழுகை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கொட்டிவாக்கம் அல்நூர் பள்ளிவாசலில் நடைப்பெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பங்கேற்றார். அவருடன் மாநில செயலாளர்கள் N.தைமிய்யா, A. சாதிக் பாஷா, மாநில துணைச் செயலாளர் புதுமடம் அணிஸ், மாநில இளைஞர் அணி செயலாளர் ஷமிம் அகமது, மாநில விவசாய அணி செயலாளர் முபாரக் ஆகியோரும் பங்கேற்றனர். இலங்கை அமைச்சர் ரவுப் ஹக்கிம், பேராசிரியர் ஜவாஹிருல்லா, அப்துல் ரஹ்மான் (Ex .MP), செ.ஹைதர் அலி, கவிஞர் அறிவுமதி, சிலம்பொலி செல்லப்பனார், பத்திரிக்கையாளர் குலாம் முகம்மது, ஆளூர் ஷாநவாஸ், ஆவண பட இயக்குனர் பாரதி குமார், இயக்குனர் அமீர், M.G.K.நிஜாமுதீன், திருப்பூர் அல்தாப், தி.மு.அப்துல் காதர், கவிஞர் ஜெயபாஸ்கரன், மெளலவி.கான் பாகவி, மெளலவி. இல்யாஸ் ரியாஜி, யுனிவர்சல் ஷாஜகான், பேராசிரியர்.ஹாஜாகனி, ப.அப்துல் சமது, அப்பல்லோ.அனிபா, புரசைவாக்கம் சிக்கந்தர், அறிவிப்பாளர் பி.ஹெச்.அப்துல் ஹமீது, சிங்கப்பூர் முஸ்தபா, வெல்பர் பார்டி சிக்கந்தர், இயக்குனர் அகத்தியன். கோனிகா.பஷிர் ஹாஜியார், காயல் இளவரசு, இறையன்பன் குத்தூஸ் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் இறுதி நிகழ்ச்சியில்
கவிக்கோ இல்லத்தில் மஜக பொதுச் செயலாளர்..!
சென்னை.ஜுன்.03., சென்னை பனையூரில் உள்ள கவிக்கோ அவர்களின் இல்லத்திற்க்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினரும்மான M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வருகை தந்து அவரது உடலை பார்வையிட்டு மரியாதை செலுத்தினார்கள். மறைந்த கவிக்கோ மகள் வழி பேரன் டாக்டர் நசிர் அவர்களிடம் அவரது கடைசி நிமிடங்கள் பற்றி கேட்டறிந்தார்கள். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து விட்டு பிறகு அங்கிருந்த இரங்கல் பதிவேட்டில் தனது கருத்துகளை பதிவு செய்தார். அதில், சிந்தனை என்னும் ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுத்த பேரறிஞர் என்றும் காந்த வரிகளாலும், கந்தக சொற்களாலும் தமிழ் இலக்கிய உலகை வழிநடத்தியவர் என்றும், உலகின் சன்னலை தமிழ் இலக்கிய உலகிற்கு திறந்து காட்டியவர் என்றும் புகழாரம் சூட்டி இரங்கலை பதிவு செய்தார். அவருடன் மாநில விவசாய அணி செயலாளர் முபாரக், நாகை தெற்கு மாவட்ட பொருளாளர் பரக்கத் அலி, சகோ.ஜெய்னுதீன் ஆகியோர் உடன் இருந்தார்கள். தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, #MJK_IT_WING சென்னை. 02.06.2017.
கலைஞரின் பணிகளை மனதார பாராட்டுகிறோம்…
மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அறிக்கை: தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், தி.மு.க.வின் தலைவருமான திரு. கலைஞர் அவர்களின் சட்டப்பேரவை வைர விழா நிகழ்ச்சி இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. கலை, இலக்கியம், தமிழ்த் தொண்டு, சமுதாயப்பணிகள், இவற்றோடு அரசியலை முன்னிறுத்தி அவர் ஆற்றிய சேவைகள் பிரமிப்பானவை. சட்டப்பேரவையில் அவர் எடுத்து வைத்த வாதங்கள் கூர்மையான ஆயுதங்களாக பாய்ந்தன. அபாரமான நினைவாற்றல் அவரது ஆளுமையை அலங்கரித்தது. நகைச்சுவை ததும்ப அவர் எடுத்துரைத்த கருத்துக்களும், புள்ளி விபரங்களும் நாட்டு மக்களால் வெகுவாக ரசிக்கப்பட்டது. இந்தியாவின் மூத்த தலைவர்களில் ஒருவராக போற்றப்படும் திரு. கலைஞர் அவர்களின் சட்டப்பேரவை செயல்பாடுகள் வரலாற்றின் பக்கங்களின் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் என்பதில் ஐயமில்லை. மிக மிக எளிய குடும்பத்து பின்னனியில் இருந்து உருவாகி, சீர்திருத்த பாதையில் பயணித்து, தமிழக அரசியலையும் தாண்டி தேசிய அரசியலையும் தீர்மானித்த அவரது அறிவும் ஆளுமையும் பலருக்கும் அரசியல் பாடமாக இருக்கிறது. மனிநேய ஜனநாயக கட்சி அரசியல் ரீதியாக மாற்று முகாமில் பணியாற்றினாலும் , திரு.கலைஞர் அவர்கள் மீது மிகுந்த மரியாதையைக் கொண்டிருக்கிறது. அவர் மேலும் பல ஆண்டுகள் வாழ்ந்து மக்களுக்கு தொண்டாற்ற