காயல்பட்டினம் இளைஞரை படுகொலை செய்த குற்றவாளியை கைது செய்ய கோரி மஜக பொதுச்செயலாளர் முதலமைச்சரிடம் தொலைபேசியில் வலியுறுத்தல்..!!

சென்னை.ஆக.30., காயல்பட்டினம் இளைஞர் மீரா தம்பி என்ற சகோதரர் கடந்த சில தினங்கள் முன்பு தனியார் பேருந்தில் பயணம் செய்த பொது சில காயவர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த படுகொலை சம்பந்தமாக மனிதநேய ஜனநாயக கட்சி மாநிலச் செயலாளர் என்.ஏ. தைமிய்யா அவர்கள் மஜக பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி MLA அவர்களிடம் எடுத்துக்கூறி விளக்கினார் .

இதையடுத்து, மஜக பொதுச்செயலாளர் அவர்கள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை தொலைபேசியில் தொடர்புக் கொண்டு  பேசினார். கொலைகாரர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என முதலமைச்சரிடம் தமிமுன் அன்சாரி வலியுறுத்தினார்.

உரிய நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர்  வாக்குறுதி அளித்துள்ளார். பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்களிடமும் பேசியுள்ளார்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
சென்னை.
29.08.17