களை கட்டிய மஜகவின் நாகூர் பரப்புரை…

ஏப்.17., நேற்று மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மனிதநேய ஜனநாயக கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தால் நாகூரின் கடை விதிகள் குலுங்கின.

பெரும் திரளான தொண்டர்களோடு அதிமுக கூட்டணியின் மஜக வேட்பாளர் M.தமிமுன் அன்சாரி நாகூர் கடை வீதிகளில் களமிறங்கினார்.வழியெங்கும் உற்சாக வரவேற்பு கிடைக்க,மக்கள் வெள்ளத்தில் நீந்தியபடியே வாக்கு சேகரித்தார்.

ஒவ்வொருவரும் அவரை கட்டிப் பிடித்து கைக் குலுக்கினர்.இளைஞர்கள் போட்டிப் போட்டு ‘செல்ஃபி’எடுத்தனர்.நீங்க சிறப்பாக ஜெயிப்பிங்க என்றும் நல்ல தலைவரா சமுதாயத்தை வழி நடத்துங்க….என்றும் ‘எங்க ஓட்டு உங்களுக்குத்தான் ‘என்றும் மக்கள் வாழ்த்தி வரவேற்றனர்.

அவருடன் கல்லூரியில் படித்த நண்பர்கள் ஓடிவந்து நலம் விசாரித்தனர்.இனிப்பு கடைகளுக்கு சென்றபோது கடைக்காரர்கள் குலாப்ஜாமூன் ,பால்கோவா போன்றவற்றை ஊட்டி விட்டு அன்பை வெளிப்படுத்தினர்.

கடைகளில் நின்றிருந்த வாடிக்கையாளர்களோடு அவர் கைக்குலுக்கி வாக்கு சேகரித்தார். கடை முதலாளிகள் சால்வை அணிவித்து’நீங்க சிறந்த வேட்பாளர்’என வாழ்த்தினர்.

நாகூர் தர்ஹா வாசலில் வாக்கு சேகரித்தப் போது,பல மாவட்டங்களை சேர்ந்த யாத்ரீகர்கள் ஓடிவந்து தங்களை வேட்பாளர் தமிமுன் அன்சாரியுடன் அறிமுகப்படுத்தி படம் எடுத்துக் கொண்டனர்.

நாகூர் இன்றைய பிரச்சாரம் ஒரு நட்சத்திர நிகழ்வாக அமைந்தது அனைவரையும் உற்சாகப்படுத்தியது.

தகவல்:
மஜக ஊடகப் பிரிவு