மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மஜகவினர் கோரிக்கை மனு.!

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் “மக்களுடன் மஜக” என்ற திட்டத்தின் கீழ் பொதுமக்களின் அடிப்படை கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று தீர்வு காணக்கூடிய பணிகள் மாவட்டங்கள் தோறும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு நிகழ்வாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா அவர்களை பொறுப்புக் உறுப்பினர் ரியாசுதீன் தலைமையில் மஜகவினர் சந்தித்தனர்.

இச்சந்திப்பில் நீடூர்-நெய்வாசல் பகுதியில் மிக மோசமான நிலையில் உள்ள மின்கம்பங்களை மாற்றாமல் காலதாமதம் செய்து வரும் நீடூர் மின்சாரத்துறை மீது நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும், பொது மக்களுக்கு உயிர் சேதம் ஏற்படாமல் இருக்க மோசமான நிலையில் உள்ள மின்கம்பங்களை துரிதமாக மாற்ற நீடூர் மின்சாரத்துறைக்கு ஆணை வழங்குமாறும் மனு கொடுக்கப்பட்டது.

மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் அவர்கள் உடனடியாக மின்கம்பங்களை மாற்றவும், மாற்றிய மின்கம்பங்களை புகைப்படம் எடுத்தும் தனது பார்வைக்கு அனுப்புமாறும் நீடூர் மின்சார நிலையை JE-க்கு உத்தரவை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மயிலாடுதுறை ஒன்றிய செயலாளர் ஜெப்ருதீன், நீடூர் கிளை செயலாளர் அப்துல் மாலிக், மருத்துவ அணி செயலாளர் ஹனிபா, மருத்துவ அணி துணை செயலாளர் ஃபகத்.ஜாசிப் உள்ளிட்ட மஜகவினர் பங்கேற்றனர்.