செப் 10 முற்றுகை… அதிரையில் தொடங்கியது விளம்பரங்கள்!

மே 30., 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் கைதிகளை , பொது மன்னிப்பின் கீழ் சாதி, மத, வழக்கு பேதமின்றி முன் விடுதலை செய்யக் கோரி மனிதநேய ஜனநாயக கட்சி கடந்த ஜனவரி 7 அன்று முதல் கட்டமாக கோவை மத்திய சிறை முற்றுகை போராட்டத்தை நடத்தியது.

இரண்டாம் கட்டமாக செப்டம்பர் 10 அன்று சென்னையில் தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டத்தை அறிவித்துள்ளது.

அதற்கான சுவர் விளம்பர பணிகள் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினத்தில் தொடங்கி உள்ளது.

ஒரு வாரத்தில் மாவட்டம் எங்கும் விளம்பர எழுதும் பணிகள் நடைபெற உள்ளது.

#ReleaseLongTermPrisoners

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தஞ்சை_தெற்கு_மாவட்டம்
29.05.2022