குடியாத்தம் ஓன்றிய கிராமங்களில் பேரெழுச்சி! மஜகவில் இணையும் இளைஞர் பட்டாளம்!

மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின்பால் ஈர்க்கப்பட்டு இளைஞர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு மக்கள் தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்து வருகின்றனர்.

அதன் ஒரு நிகழ்வாக வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றிய செயலாளர் T.M.சலிம் தலைமையில் கொல்லப்பள்ளி கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தன்னெழுச்சியாக தங்களை மஜகவில் இணைத்து கொண்டனர்.

இதில் குடியாத்தம் நகர செயலாளர் S.அனிஸ் அவர்கள் புதிதாக கட்சியில் இணைந்தவர்கள் மத்தியில் கட்சியின் கொள்கை மற்றும் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் எடுத்துரைத்தார்..

இந்நிகழ்வில் வேலூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட செயலாளர் முபாரக் அஹ்மத், மாணவர் இந்தியா குடியாத்தம் நகர செயலாளர் ஜிஷான், நகர மருத்துவ அணி துணை செயலாளர் முஹம்மத் உசேன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#வேலூர்_மாவட்டம்
21-11-2021