ஆம்பூரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி!! களத்தில் மஜக பேரிடர் மீட்பு குழு!

தமிழகம் முழுவதும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளில் மஜக வினர் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக மனிதநேய ஜனநாயக கட்சி திருப்பத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஆம்பூர் பகுதிகளில் பருவ மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பணியில் மஜக பேரீடர் மீட்பு குழு களமிறங்கியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது, மழையின் காரணமாக ஏற்படும் பேரிடர்களில் பாதித்த மக்களுக்கு உதவும் வகையில் தங்களால் முடிந்த அளவிற்கு மாவட்டம் முழுவதும் மஜகவினர் உதவி வருவது குறிப்பிடத்தக்கது…

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#திருப்பத்தூர்_மாவட்டம்
20.11.2021