வேதை நகராட்சி முற்றுகை அறிவிப்பு… மஜக கோரிக்கையை ஏற்ற அதிகாரிகள்!

வேதை.நவ.14., நாகை மாவட்டம், தோப்புத்துறையில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியதாலும், கழிவு நீர் அடைப்பாலும் குட்டையன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது.

அதை சீர் செய்ய தாமதம் ஏற்பட்டதையடுத்து இன்று நகர #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் சார்பில் வேதாரண்யம் நகராட்சி முற்றுகையிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

அடுத்த இரண்டு மணி நேரத்தில் நகராட்சி ஊழியர்கள் வருகை தந்து மஜகவினரின் கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.

அதன் பிறகு இரவுக்குள் துரித நடவடிக்கை எடுக்கப்படடும் என அதிகாரிகள் உறுதி அளித்ததால், முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டதாக மஜகவினர் அறிவித்தனர்.

மஜகவினரின் முன் முயற்சிகளுக்கு பொது மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

தகவல்,
#MJK_IT_WING
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#மஜக_நாகை_மாவட்டம்
14.11.21