வட சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணியில் ஈடுபட்ட மஜகவினர்!

சென்னையில் கடும் மழை காரணமாக 5 நாட்களுக்கும் மேலாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சி வட சென்னை மேற்கு மாவட்டத்தின் சார்பில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்கள் வட சென்னை மேற்கு மாவட்ட பொருளாளர் முகமது அக்பர், அவர்கள் தலைமையில் திருவிக நகர், புளியந்தோப்பு, பெரம்பூர், உள்ளிட்ட பகுதிகளில் வழங்கப்பட்டது.

இப்பணியில் வட சென்னை கிழக்கு மாவட்ட பொருளாளர் தாங்கல் தாரிக், மாவட்ட துணைச் செயலாளர் ஹனீப்,வர்த்தக அணி செயலாளர் அப்துல் ரஷீத், பெரம்பூர் பகுதி செயலாளர் ரபிக் முகமது, 72 வது வட்ட செயலாளர் முகமது சேட்டு, 73 வது வட்ட செயலாளர் மஸ்தான், அப்துல்லா, உள்ளிட்ட நிர்வாகிகள் ஈடுபட்டனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#வடசென்னை_மேற்கு_மாவட்டம்
12.11.2021