சென்னை அமைந்தகரையில் அஸ்ஸாம் அரச பயங்கரவாதத்தை கண்டித்து பதாகை ஏந்தி மஜக ஆர்ப்பாட்டம்! துணை பொதுச்செயலாளர் தைமிய்யா பங்கேற்பு.!!

அஸ்ஸாம் மாநிலம் சிபாஜ்ஹார் என்ற இடத்தில் 30 ஆண்டுகளாக குடியிருந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரை அங்கிருந்து விரட்ட அரச பயங்கரவாதத்தை ஏவிய பாஜக மாநில அரசை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சியின், மத்திய சென்னை மேற்கு மாவட்டம் சார்பில் அமைந்தகரை MMDA பால்பூத் அருகில் பதாகை ஏந்திய ஆர்ப்பாட்டம் அண்ணாநகர் பகுதி செயலாளர் அ.அஸ்லாம் பாஷா தலைமையில் நடைப்பெற்றது.

ஆர்பாட்டத்தில் மஜக மாநில துணை பொதுச்செயலாளர் N.A.தைமிய்யா பங்கேற்று அஸ்ஸாம் மாநில பாஜக அரசை கண்டித்து கண்டன உறையாற்றினார்.

அவருடன் மாநில துணை செயலாளர் புதுமடம் அனீஸ், இளைஞரணி மாநில செயலாளர் அசாருதீன், மாவட்ட செயலாளர் சாகுல் ஹமீது, மாணவர் இந்தியா மாநில பொருளாளர் பஷீர் ஆகியோர் பங்கேற்று கண்டன கோஷம் எழுப்பினர்.

இதில் மஜக மாவட்ட துணை செயலாளர் பக்கீர் மைதீன் உள்ளிட்ட மாவட்ட, பகுதி, கிளை நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டு தங்களது எதிர்பை பதிவு செய்தனர்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#மத்தியசென்னை_மேற்கு_மாவட்டம்
01-10-2021