சத்தியமங்கலத்தில் விசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம்! மஜக துணை பொதுச்செயலாளர் சையது அகமது பாருக் பங்கேற்பு!

ஒன்றிய அரசின் வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராக, தலைநகர் டெல்லியில் விவசாய சங்கத்தினரின் வழிகாட்டலில் விவசாயிகள் தொடர் போராட்டங்களை அற வழியில் அயராது நடத்தி வருகின்றனர்.

அவர்களுக்கு ஆதரவாக மனிதநேய ஜனநாயக கட்சி ஈரோடு மேற்கு மாவட்டம் சத்தியமங்கலமம் நகரத்தின் சார்பாக போராட்டம் நடைபெற்றது.

இதில் மஜக துணை பொதுச் செயலாளர் சையது அகமது பாரூக், அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்.

இதில் மாவட்ட துணை செயலாளர் பாபுலால், நகர செயலாளர் சலீம், உள்ளிட்ட திரளான மஜக நகர நிர்வாகிகள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#ஈரோடு_மேற்கு_மாவட்டம்
27.09.2021