You are here

கோவை உக்கடத்தில் மஜகவினர் போராட்டம்! ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்!

ஒன்றிய அரசு கொடு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக செப்.27, இன்று விவசாயிகள் நாடு தழுவிய வேலை நிறுத்தம், போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இன்று மனிதநேய ஜனநாயக கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதை தொடர்ந்து கோவை மாநகர் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், அவர்கள் தலைமையில் உக்கடத்தில் போராட்டம் நடைபெற்றது.

இதில் தொழிற் சங்க மாநில செயலாளர் கோவை MH.ஜாபர் அலி, IKP மாநில செயலாளர் லேனா இசாக், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் சம்சுதீன், மருத்துவ சேவை அணி மாநில துணை செயலாளர் செய்யது இப்ராஹிம், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர் ATR.பதுருதீன், மற்றும் மாவட்ட , பகுதி, கிளை, நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்று ஒன்றிய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கோவை_மாநகர்_மாவட்டம்
27.09.2021

Top