திருப்பூரில் மஜகவின் சுதந்திர தின விழா கொடியேற்றம்!

இந்திய தேசத்தின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சி திருப்பூர் வடக்கு மாவட்டத்தின் சார்பில் தேசியக் கொடி ஏற்று விழா மாவட்ட பொருளாளர் கண்ணன், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் மஜீத், அவர்கள் கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர்கள் இப்ராகிம், ஷேக் அப்துல்லா, ஷேக் ஒலி, கூத்தம் பாளையம் கிளை நிர்வாகிகள் பைஜுர்ரஹ்மான், உசேன், சாதிக் பாட்ஷா, மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#திருப்பூர்_வடக்கு_மாவட்டம்
15.08.2021