நீலகிரியில் சட்டக்கல்லூரி நிகர் நிலைப்பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்! அமைச்சரிடம் மஜகவினர் மனு அளித்தனர்!

மனிதநேய ஜனநாயக கட்சி நீலகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் கமாலுதீன், அவர்கள் தலைமையில் தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், அவர்களை நிர்வாகிகள் சந்தித்தனர்.

இச்சந்திப்பில் நீலகிரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்க கூடிய சட்டக் கல்லூரி, மற்றும் நிகர் நிலைப் பல்கலைக் கழகம், உருவாக்கப்பட வேண்டும் என அமைச்சரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து முதல்வரிடம் பேசி நடவடிக்கை மேற்கொள்வதாக அமைச்சர் பதிலளித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் காலிப், மாவட்ட துணை செயலாளர் அப்துல் ஹமீத், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் ரிஸ்வான், மனித உரிமை அணி மாவட்ட செயலாளர் தப்ரேஸ், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நீலகிரி_கிழக்கு_மாவட்டம்
06.08.2021