மஜகவின் நல்லிணக்க அரசியல் காலத்தின் தேவையாகும்! செங்கை வடக்கு மாவட்ட பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு!

செங்கை வடக்கு மாவட்ட பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு!

ஜூலை.14., மஜக வின் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயல் வீரர்கள் மற்றும் பொதுக்குழு கூட்டம் தாம்பரத்தில் எழுச்சியுடன் நடைப்பெற்றது.

இதில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்றார்.

முன்னதாக கட்சியின் தொழிற்சங்கமான MJTS ன் கொடியை இந்து மிஷன் ஆஸ்பத்திரி எதிரே தொண்டர்களின் முழக்கங்களுக்கிடையே ஏற்றி வைத்தார்.

பொதுக் குழுவை முன்னிட்டு தாம்பரம்- ரங்கநாதபுரம் முழுக்க மஜக கொடிகள் கட்டப்பட்டு, சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன.

அதில் புதிய மாவட்டச் செயலாளர் தேர்வு பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மத்தியில் நடத்தப்பட்டது.

பொறுப்புக்கு இருவர் முன்மொழியப்பட்ட நிலையில், தேர்தல் நடைபெற்றது. அதில் தாம்பரம் . ஜாஹீர் உசேன் அவர்கள் அதிக வாக்குகள் பெற்று மாவட்ட செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

மாநிலத் துணைச் செயலாளர் ஷஃபி, தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் தாரிக், மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சாகுல் ஆகியோர் தேர்தல் பார்வையாளர்களாக செயல்பட்டு தேர்தலை நடத்தினர்.

பின்னர் அம் மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 25 இளைஞர்கள் பொதுச் செயலாளர் முன்னிலையில் தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர்.

நிறைவாக பேசிய பொதுச் செயலாளர் அவர்கள், மஜக சமூக நல்லிணக்கத்தையும், சமூக நீதியையும் பாதுகாத்திடும் வெகு மக்கள் அரசியலை முன்னெடுப்பதாகவும் , வன்முறையற்ற அமைதி வழியில் பயணிப்பதை இலக்காக கொண்டிருப்பதாகவும், அதனால் மஜக வின் உயிரோட்ட அரசியல் காலத்தின் தேவையாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

பிறகு மாவட்டம் முழுவதும் புதிதாக 50 கிளைகளை உருவாக்க வேண்டும் என்றும், உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

உற்சாகம் பொங்க புதுத்தெம்புடன் தொண்டர்கள் புறப்பட்டனர்.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#செங்கை_வடக்கு_மாவட்டம்
14.07.2021

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.