மேட்டுப்பாளையத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து மஜகவினர் நூதன ஆர்ப்பாட்டம்!

கோவை வடக்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மேட்டுப்பாளையத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் R.முஹம்மது அப்பாஸ் தலைமையில் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றது.

இதில் மாவட்ட பொருளாளர் M.சுல்தான், தலைமை செயற்குழு உறுப்பினர் A.முஹம்மது நிவாஸ் மாவட்ட துணைச் செயலாளர்கள் M.காஜாமைதீன் R.யாசர் அரபாத் S.உமர் பாரூக் A.ஷேக்மைதீன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன முறையில் எதிர்ப்பை தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் H.தொளபீக், மனித உரிமை அணி மாவட்ட செயலாளர் மகேந்திரன், SMR பாரி, அன்னூர் ரியாஸ், ரமீஜ்ராஜா, சதாம் உசேன், சபீக், சேக், உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கோவை_வடக்கு_மாவட்டம்
07.07.2021