கொரோனா காலத்தில் கடன் தவணைகளை கட்ட வற்புறுத்தும்! மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும்! விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மஜகவினர் மனு!

ஜுன்.21., கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் விருது நகர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழு (மைக்ரோ பைனான்ஸ்) நிறுவனங்கள் கடன் தவணைகளை கட்ட வற்புறுத்தி பெண்களிடம் கடும் நெருக்கடிகள் கொடுத்து வருகின்றனர்.

எனவே இந்நிறுவனத்தை சேர்ந்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், கடன் தவணைகட்ட கால அவகாசம் ஏற்படுத்தி தரக்கோரியும், விருது நகர் மாவட்ட ஆட்சியர் திரு.லோகநாத ரெட்டி, அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் கண்மணி காதர், அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் மனு அளித்தனர்.

இதில் மைக்ரோ பைனான்ஸ் நிறுனங்களின் அத்துமீறல்களை, தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க மஜக வினர் வலியுறுத்தினர்.

கோரிக்கைகளை கேட்ட ஆட்சியர் அவர்கள் இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக மஜக வினரிடம் கூறினார்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#விருது_நகர்_மாவட்டம்
21.06.2021

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.