மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்க வேண்டும்!

#விருதுநகர்_மாவட்ட_ஆட்சியர்_அலுவலகத்தில்_மஜக_வினர்_மனு!

கொரோனா தொற்று பரவலால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண நிதியாக பத்தாயிரம் ரூபாய், வழங்க வேண்டும் என விருது நகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் கண்மணி காதர், அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் மனு அளித்தனர்.

முன்னதாக மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் காளிமுத்து, அவர்களை சந்தித்து இது குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.

இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் ராஜபாளையம் ஒன்றிய செயலாளர் தமிமுன்அன்சாரி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#விருது_நகர்_மாவட்டம்

07.06.202