மதுரையில் கொரோனா தொற்றால் மரணமடைந்தவரை நல்லடக்கம்bசெய்த மஜகவினர்

மே.13., மதுரை கிடாரிபட்டி பகுதியை சேர்ந்த அப்துல்லா என்ற நபர் கொரோனா பாதிப்பால் மரணமடைந்தார்.

அதை தொடர்ந்து அவரது உறவினர்கள் கோரிக்கையை ஏற்று மனிதநேய ஜனநாயக கட்சி மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் முபாரக், அவர்கள் தலைமையில் அவரது உடலை பெற்று சுகாரத்துறை அறிவுறுத்திய பாதுகாப்பு வழிமுறையின்படி நல்லடக்கம் செய்தனர்.

இப்பணியில் வடக்கு மாவட்ட செயலாளர் இப்ராஹிம், தலைமை செயற்குழு உறுப்பினர் புதூர் கனி, மாவட்ட துனை செயலாளர் சதாம் உசேன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சையது அலி, மற்றும் நிர்வாகிகள் ஈடுபட்டனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#மதுரை_வடக்கு_மாவட்டம்
12.05.2021