திருப்பூரில் மஜக சார்பில் பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் முகக்கவசங்கள் வினியோகம்!


திருப்பூர்:ஏப்.30.,

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் சூழலை கருத்தில் கொண்டு திருப்பூர் வடக்கு மாவட்டம் கூத்தம்பாளையம் கிளை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முழு கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி கிளை செயலாளர் சாதிக், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் மஜீத், அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முக கவசங்களை வழங்கினார்.

இதில் மாவட்ட துணைச் செயலாளர்கள் இப்ராஹிம்,ஷேக் அப்துல்லா, கிளை பொருளாளர் பைசூர் ரகுமான், துணைச் செயலாளர்கள் சேக் உசேன், பாண்டியன் நகர் கிளை செயலாளர் சம்சுதீன், உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முக கவசங்கள், வழங்கி கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#திருப்பூர்_வடக்கு_மாவட்டம்
30.04.2021