You are here

பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மஜக அலுவலகம் வருகை!! துணை பொதுச்செயலாளர் சுல்தான் அமீர் அவர்களுடன் சந்திப்பு!!

கோவை:ஏப்.07.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் துணை பொதுச்செயலாளர் கோவை சுல்தான் அமீர், மற்றும் மாவட்ட நிர்வாகிகளை பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் எம்.பி அவர்கள் மஜக அலுவலகம் வருகை தந்து நேரில் சந்தித்து பேசினார்.

இச்சந்திப்பில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் குறித்தும், தொகுதி ரீதியான வாக்குப்பதிவு சதவீதம் என்பது குறித்தும், மற்றும் மக்கள் நலன் சார்ந்த விஷயங்கள் குறித்தும் ஆலோசனை செய்தனர்.

இதில் தேர்தல் காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மனிதநேய ஜனநாயக கட்சி அனைத்து மட்ட நிர்வாகிகளுக்கும் சண்முகசுந்தரம் எம்.பி அவர்கள் நன்றி தெரிவித்தார்.

இச்சந்திப்பில் திமுக சார்பில் ஜெய்லா, சாதிக், IKP மாநில செயலாளர் லேனா இஷாக், மஜக மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணைச் செயலாளர் ATR.பதுருதீன், விவசாய அணி மாவட்ட செயலாளர் அன்வர், இளைஞரணி மாவட்ட செயலாளர் அன்சர், இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர்கள் பைசல் ரகுமான், சதாம், பகுதி செயலாளர் காஜா உசேன், மத்திய தொகுதி பொறுப்பாளர்கள் ஹனிபா, இப்ராஹிம், மற்றும் மாவட்ட, பகுதி, நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கோவை_மாநகர்_மாவட்டம்
07.04.2021

Top