வேலூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்! மஜக மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது பங்கேற்று சிறப்புரை..!!


வேலூர்.ஏப்ரல்.04.,

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேலூர் தொகுதி வேட்பாளர் பா.கார்த்திகேயன் அவர்களை ஆதரித்து இறுதிகட்ட பிராச்சாரமாக வேலூர் மண்டித்தெரு பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் திரு.துரைமுருகன் பங்கேற்ற இப்பொதுக்கூட்டத்தில்,

மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் பங்கேற்று உரையாற்றினார், இந்தத் தேர்தல் வெறும் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் அல்ல எனவும் இது திமுகவுக்கும் பாசிசத்திற்கும் இடையே நடைபெறும் யுத்தம் என்பதால் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு இம்முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காவிடினும் பரவாயில்லை ஆனால் ஒருபோதும் தமிழகத்தில் பாசிசம் வளர்ந்துவிடக்கூடாது என்னும் ஒற்றை நோக்கத்துடன் திமுகவிற்கு நாங்கள் தார்மிக ஆதரவு அளித்ததாகவும்,

மஜகவினராகிய நாங்கள் தமிழகம் முழுவதும் சூராவளி பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது திராவிட முன்னேற்ற கழகத்திற்கு தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய எழுச்சியும் வரவேற்பும் கிடைத்துள்ளதாகவும், இம்முறை திமுக கூட்டணிக்கு வெற்றி உறுதி என்றவர்,

தமிழ் நாட்டின் உரிமைகள் காக்கப்பட திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்கள் அபார வெற்றி பெற வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று எடுத்துரைத்தார்.

இதில் மாநிலத் துணைச் செயலாளரும் மாவட்ட பொறுப்பாளருமான SG.அப்சர் சையத், தலைமை செயற்குழு உறுப்பினர் மன்னிவாக்கம் யூசுப், மாவட்ட செயலாளர் முஹம்மத் யாசின், மாவட்ட துணை செயலாளர்கள் ஜாகிர் உசேன், சையத் உசேன், வர்தக்கர் அணி செயலாளர் பட்டேல் ஷமில், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அமீன், அக்மல், துணை செயலாளர் சாதிக் மற்றும் பல்வேறு நிர்வாகிகள் பெரும் திரளானோர் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#MJK2021
#TNElection2021
#வேலூர்_சட்டமன்ற_தொகுதி_தேர்தல்_பணிக்குழு
04.04.2021