மஜக தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகரம் சார்பில் இலவச கண்சிகிச்சை முகாம்!


தென்காசி.பிப்.18.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் தென்காசி மாவட்டம், சங்கரன் கோவில் நகரம் மற்றும் நாகர்கோவில் பெஜான்சிங் கண் மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச கண்சிகிச்சை முகாம் நகர செயலாளர் முகம்மது இத்ரீஸ், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் நகர பொருளாளர் முகம்மது இஸ்மாயில், நகர துணைச் செயலாளர் மாலிக் , உசேன், ஷேக் மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக
மனிதநேய ஜனநாயக கட்சி தென்காசி மாவட்ட செயலாளர் M. பீர் மைதீன், அவர்கள் மற்றும் நாகர்கோயில் பெஜான்சிங் கண் மருத்துவமனை நிர்வாகிகள் இணைந்து முகாமை தொடங்கி வைத்தனர்.

இம்முகாமில் 100க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர், மேலும் கண் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப் பட்டவர்களுக்கு இலவச அறுவை சிகிச்சை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் தென்காசி மாவட்ட துணைச் செயலாளர் பொன்னானி அபுதாஹிர், வாவை A.இனாயத்துல்லா, தகவல் தொழில் நுட்ப அணி பொருளாளர் கப்பிளி காதர், மனித உரிமை மாவட்ட செயலாளர் அ.பீர் மைதீன் , நகர இளைஞரணி செயலாளர் முகம்மது ரபீக் , நகர வர்த்தக அணி செயலாளர் ராஜா முஹம்மது , நகர மனித உரிமை அணி ஷேக் மைதீன் மற்றும் நிர்வாகிகள் திவான் மைதீன், காஜா மைதீன், ஷேக் மைதீன், மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்கரன்கோவில் நகர நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தென்காசி_மாவட்டம்
18-02-2021

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.