நாகை சிக்கலில் விவசாய கடன் தள்ளுபடி கேட்டு CPM மறியல்! மு தமிமுன் அன்சாரி MLA நேரில் ஆதரவு!


ஜனவரி 18,

விவசாயிகள் வாங்கிய அனைத்து கடனையும் ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து நாகை தொகுதி சிக்கலில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM ) சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் V. மாரிமுத்து தலைமையில் மறியல் போராட்டம் நடை பெற்றது.

அதனை தொடர்ந்து திரளானோர் கைது செய்யப்பட்டனர்.

அப்போது மார்கழி மழையால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களை பார்வையிட்டு விவசாயிகளை சந்தித்துக் கொண்டிருந்த மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள்
மறியல் நடத்தி பிறகு மண்டபத்தில் கைது செய்யப்பட்டிருந்தவர்களை சென்று நேரில் சந்தித்து ஆதரவளித்தார்.

அப்போது மஜக நாகை ஒன்றிய செயலாளர் ஜலால் உள்ளிட்டோரும் உடன் சென்றனர்.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நாகை_மாவட்டம்
18.01.2021