புளியங்குடியில மஜக சார்பில் கண்சிகிச்சை முகாம்!!


ஜன:11.,

தென்காசி மாவட்டம் புளியங்குடி நகர மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் நாகர் கோவில் பெஜான்சிங் கண் மருத்துவமனை &புளியங்குடி முஹைதீன் ஆண்டவர் ஜமாத் கமிட்டி இணைந்து நடத்தும் மாபெரும் கண்சிகிச்சை முகாம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் பாதுஷா அவர்கள் தலைமை தாங்கினார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்டச் செயலாளர் அச்சம்புதூர் M. பீர் மைதீன், மாவட்ட துணைச் செயலாளர் வாவை இனை யத்துல்லா, ஆகியோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தனர்.

இம்முகாமில் 200க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர் இதில் 20 நபர்களுக்கு மேல் சிகிச்சை அளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் நகர பொருளாளர் சதாம் உசேன், நகர துணை நிர்வாகிகள் மகபூப் சுபஹானி, அப்துல் காதர், செய்யது அலி, பாதுஷா சுபஹானி, மற்றும் நகர நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ஜமாத் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJK_IT_WING
#தென்காசி_மாவட்டம்
10.01.2021