மஜக தென்காசி மாவட்டம் சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம்!!


தென்காசி : செப் 14.,

தென்காசி மாவட்டம் மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாக ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் M. பீர் மைதீன், அவர்கள் தலைமையில் நடைபெற்றது, மாவ‌ட்ட பொருளாளர் M. S. S. முகம்மது இப்ராஹிம், அவர்கள் முன்னிலை வகித்தார்.

இதில் கட்சியின் வளர்ச்சி குறித்தும், தீவிர உறுப்பினர் சேர்க்கை குறித்தும், ஆலோசிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தென்காசி மாவ‌ட்ட துணை செயலாளர்கள் பொன்னானி அபுதாஹீர், வாவை A. இனாயத்துல்லா, பண்பொழி அபுதாஹிர், ஆதம் பின் ஹனிபா, மாவ‌ட்ட இளைஞரணி செயலாளர் முகம்மது இஸ்மாயில், மாவ‌ட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் சிலம்பாட்ட சாகுல், மாவ‌ட்ட தொழிற்சங்க தலைவர் P. ரவி, செயலாளர் T.கிருஷ்ணமூர்த்தி, மாவ‌ட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் M. முஹ‌ம்ம‌து பஷீர் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. மாணவ, மாணவிகளின், உயிரோடு விளையாடும் நீட் தேர்வை ரத்து செய்து வேண்டும்.

2. ஆயுள் சிறை வாசிகளை தமிழக அரசு கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்.

3. தென்காசி பழைய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள காய்கறி வணிக வளாகம் மாற்றி அமைக்க வேண்டும்.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தென்காசி_மாவட்டம்
13.09.2020