கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக பெரியகுளத்தில் பொதுமக்களுக்கு முககவசம் வழங்கிய மஜகவினர்!!


பெரியகுளம்
செப்:14.,

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை பணியில் தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அதை தொடர்ந்து தேனி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி பெரியகுளம் நகரம் சார்பில் முக கவசம் வழங்கும் நிகழ்வு மாவட்ட துணை செயலாளர் காஜா நஜீம்தீன், அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதில் காய்கறி மார்க்கெட்,பேருந்து நிலையம், பகுதிகளிலும் மற்றும் தூய்மை பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், குழந்தைகள் என 500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு முக கவசங்கள் வழங்கப்பட்டது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தேனி மாவட்ட கூட்டமைப்பு துணை தலைவர் வெற்றி முஸ்தபா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேனி மாவட்ட துணைச் செயலாளர் நூர் முகமது, இந்திய தேசிய லீக் கட்சி தேனி மாவட்ட தலைவர் அப்துல் கபூர், எஸ்டிபிஐ நகர செயலாளர் பாசித் ரகுமான், ஆகியோர் பங்கேற்று முக கவசங்களை விநியோகித்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் சேக்பரீத், மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர் சலீம். பெரியகுளம் நகர செயலாளர் தஸ்திக் ரகுமான், பெரியகுளம் ஒன்றிய செயலாளர் சித்திக், பெரியகுளம் தொழிற்சங்கத் தலைவர் அக்கீம், மற்றும் பெரியகுளம் நகர ஒன்றிய கிளை நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்,

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப _அணி
#MJK_IT_WING
#பெரியகுளம்_நகரம்
#தேனிமாவட்டம்
13.09.2020