கோவையில் மஜக இளைஞரணி சார்பில் கபசுர குடிநீர் விநியோகம்!!

ஜூலை:03.,

கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் இளைஞரணி சார்பில் கொரோனா நோயை கட்டுப்படுத்தும் விதமாகவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் உக்கடம் பேருந்து நிலையம், கெம்பட்டி காலனி, புல்லுக்காடு ஹவுசிங் யூனிட், ஆகிய பகுதிகளில் இளைஞரணி மாவட்ட செயலாளர் அன்சர் பாஷா, அவர்கள் தலைமையில் கபசுர குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கினர்.

இதில் தொழிற்சங்க மாநில செயலாளர் கோவை M.H. ஜாபர் அலி, மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மாவட்ட துணை செயலாளர் ATR.பதுருதீன், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹிம், இளைஞரணி மாவட்ட துணைச் செயலாளர்கள் சதாம், செய்யது, மற்றும் ஹக்கீம், அபு, சுவனம் அபு, சிராஜுதீன், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர்.

இதில் வணிகர்கள், ஓட்டுனர்கள், பொதுமக்கள், என சுமார் 800க்கும் அதிகமானோர் கபசுர குடிநீர் அருந்தி பயனடைந்தனர்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவைமாநகர்மாவட்டம்.
03.07.2020