கொரோனா வைரஸ் எச்சரிக்கையை அனைவரும் பின்பற்ற வேண்டும். : முதமிமுன்அன்சாரி MLA வேண்டுகோள்..!

சென்னை.மார்ச்.17,

தமிழகம் எங்கும் நடைபெறுவது போல சட்டமன்றத்திலும் “கொரோனா வைரஸ்” முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இன்றிலிருந்து பார்வையாளர்கள் வருகைக்கு தடை போடப்பட்டிருக்கிறது.

சபைக்குள் நுழையும் MLA க்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது.

இன்று மஜக பொதுச் செயலாரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், மருத்துவ கருவி மூலம் பரிசோதனை செய்துக்கொண்ட பின்னரே அவைக்குள் சென்றார்.

அவைக்கு வெளியே வரும் போதும், அவ்வாறே அதை பின்பற்றினார்.

இது குறித்து செய்தியாளர் ஒருவர், “நீங்கள் இதை முறையாக பின்பற்றுகிறீர்கள்” என பாராட்டினார்.

அரசு எடுக்கும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் உட்பட பொதுமக்கள் எல்லோரும் பின்பற்ற வேண்டும் என்றும், வருமுன் காப்பதே சிறந்தது என்றும், இதை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இவ்விஷயத்தில் பொதுமக்கள் அலட்சியம் காட்டக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.

தகவல்,
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி,
#MJK_IT_WING
#சட்டப்பேரவை_வளாகம்
17-03-2020