சென்னையில் தொடங்கியது அமைதி வழிபுரட்சி.!


சென்னை.ஜனவரி.31..,

மத்திய பாரதிய ஜனதா அரசாங்கம் கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி இந்தியா முழுவதும் பல்வேறு போராட்டங்கள் பல வடிவங்களில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சென்னை மண்ணடியில் உள்ள இளையான்குடி வட்டார முஸ்லிம் ஜமாத் சார்பாக இன்று வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை முடிந்தவுடன் பள்ளிவாசல் முன்பாக கோரிக்கை பதாகைகளை ஏந்தி கோசங்கள் ஏதும் போடாமல் 15 நிமிடம் மட்டும் அமைதி வழி போராட்டம் நடத்திவிட்டு கலைந்து சென்றனர்.

இப்போராட்டத்தில் கலந்து கொண்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் “இன்றைய தினம் மத்திய அரசு கொண்டு வந்துள்ள கருப்பு சட்டத்திற்கு எதிராக புதிய வடிவிலான ஒரு போராட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. இப்போராட்டத்தை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகளும் முன்னெடுக்க வேண்டும். வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை முடிந்தவுடன் 15 நிமிடம் மட்டும் அமைதியாக கோரிக்கை பதாகைகளை ஏந்தி நின்று விட்டு பின்னர் கலைந்து செல்ல வேண்டும். இதன் மூலம் போராட்ட உணர்வை மழுங்க விடாமல் செய்யலாம்” என்று கோரிக்கை வைத்தார்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சென்னை
31-01-2020