71வதுகுடியரசு தினத்தை முன்னிட்டு மஜகவின் மாபெரும் இரத்ததானமுகாம்..!

செங்கை.ஜனவரி.29..,

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் 71-வது குடியரசு தினத்தை முன்னிட்டு கடந்த 26-01-2020 அன்று காலை மனிதநேய ஜனநாயக கட்சியியும், நிழல் தன்னாா்வ தொண்டு நிறுவனம் மற்றும் சென்னை அன்னை தெரேசா இரத்தவங்கி இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் மஜக மாநில மருத்துவ அணிச் செயலாளா் எம்.எம்.பாஷா தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் N.A.தைமிய்யா m.sc அவர்கள் கலந்து கொண்டு முகாமை துவங்கி வைத்தார்கள்.

மேலும் இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் மண்ணிவாக்கம் முஹம்மது யுசூப், நிழல் தன்னாா்வ தொண்டு நிறுவன இயக்குனா் லயன் க.வெங்கடேசன், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்டப் பொறுக்குழு தலைவர் ஏச்.அப்துல்ரஷிது, மாவட்ட பொறுப்பாளர்கள் திரூப்போரூர் ஏ.மூஹம்மது ரபீக், கல்பாக்கம் எஸ்.ஷமியுல்லா, கொளப்பாக்கம் ஜெ.தமீம் அன்சாரி, கேளம்பாக்கம் க.இனாயத்துல்லா உள்ளிட்ட திரூப்போரூர் ஒன்றிய & கிளை நிர்வாகிகள் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து பொதுமக்கள் இளைஞா்கள் ஆா்வமுடன் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தனர், இரத்ததானம் செய்த அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#செங்கை_மாவட்டம்
26-01-2020