கூத்தாநல்லூரில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு பொதுக்கூட்டம்! எஸ்எஸ் ஹாரூன் ரசீது கண்டன உரை..


ஜன.21,

கூத்தாநல்லூரில் கூட்டமைப்பு சார்பில் இம்தாதுல் முஸ்லிமீன் சபை நடத்திய குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு விளக்க கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.

இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராகவும், கறுப்பு சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் எழுச்சிமிகு கண்டன உரை நிகழ்த்தினார்.

மஜக மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் பேசுகையில், ‘இந்த சட்டத்திற்கு எதிராக இன்று உலமாக்களும் அரசியல் கட்சி இயக்கங்களுடைய தலைவர்களும் ஒரே அணியில் நிற்கிறார்கள் யாராவது கணக்கெடுப்பு நடத்த வந்தால் அந்தத் தலைவர்களின் உத்தரவுபடி செயல்படுங்கள் தலைவர்களின் உத்தரவு இல்லாமல் தங்களுடைய விபரங்களை வழங்க வேண்டாம்’ என்று கோரிக்கை வைத்தார்.

இந்நிகழ்வுகளில், மாநில துணைச் செயலாளர் துரை முகம்மது, மாவட்ட செயலாளர் சீனி ஜெகபர் சாதிக், மாவட்ட பொருளாளர் ஷேக் அப்துல்லாஹ், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜம்ஜம் சாகுல், ஜெய்னுல்லாபுதின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துக் கொண்டனர்.

தகவல் ;

#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#திருவாரூர்_மாவட்டம்.
20/01/2020

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.