பொதக்குடியில் கடைத்திறப்பு மற்றும் பிரமுகர்கள் சந்திப்பு, எஸ்எஸ் ஹாரூன்ரசீது பங்கேற்பு!!


ஜன.21,
திருவாரூர் மாவட்டம், பொதக்குடிக்கு வருகை தந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ் ஹாரூன் ரசீது M.Com., அவர்கள் பின்வரும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

மஜக திருவாரூர் மாவட்ட துணைச் செயலாளர் லியாக்கத் அலி அவர்களின் புதிய நிறுவனமான TSK செல் சென்டர் சேல்ஸ் & சர்வீஸ் மையத்தை மாநிலப் பொருளாளர் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று திறந்து வைத்தார்.

தொடர்ந்து பொதக்குடி ஊர் உறவின்முறை ஜமாத் அற பணி சங்க நிர்வாகத்தினரை சந்தித்து குடியுரிமை சட்டம் குறித்து கலந்துரையாடினார்.

அதனை தொடர்ந்து பொதக்குடியை சேர்ந்த பிரமுகர்கள், மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர். அவர்களை வரவேற்று அவர்களுக்கு மாநில பொருளாளர் உறுப்பினர் அட்டையை கையளித்தார். அதனை தொடர்ந்து கூத்தாநல்லூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்க புறப்பட்டு சென்றார்.

இந்நிகழ்வுகளில், மாவட்ட செயலாளர் சீனி ஜெகபர் சாதிக், மாவட்ட பொருளாளர் ஷேக் அப்துல்லாஹ், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜம்ஜம் சாகுல் மற்றும் நத்தர், ஜமால், ஜலால், நூருல் அமீன், ஜெய்னுல்லாபுதின் நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

தகவல் ;

#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#திருவாரூர்_மாவட்டம்.
20/01/2020