சிவகாசியில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்..! மன்னைசெல்லச்சாமி பங்கேற்பு


விருதுநகர்.ஜன.20..,

சிவகாசி வட்டார அனைத்து ஜமாத், கட்சி மற்றும் இயக்கங்களின் சார்பாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக சிவகாசி பாவடித்தோப்பு திடலில் பிரம்மாண்ட கண்டன பொதுக்கூட்டம் நேற்று (19-01-2020) நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் துணை பொதுச் செயலாளர் மன்னை.செல்லச்சாமி அவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசு கொண்டுவந்துள்ள மக்கள் விரோத சட்டங்களை கண்டித்து கண்டன உரை நிகழ்த்தினார்.

இக்கூட்டத்தில் விருதுநகர் மாவட்டச் செயலாளர் கண்மணி காதர் தலைமையில் திரளான மஜகவினர் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#விருதுநகர்_மாவட்டம்
19-01-2020