அதிரையில் மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட நிர்வாக குழு கூட்டம்…!

அதிரை.அக்.30., அதிராம்பட்டினத்தில் தஞ்சை தெற்கு மாவட்டம் #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் மாவட்ட நிர்வாக குழு கூட்டம் மாவட்ட பொறுப்பு குழு தலைவர் பேராவூரணி எஸ். அப்துல் சலாம் அவர்கள் தலைமையில் நகர அலுவலகத்தில் 29/10/2018 திங்கள்கிழமை மதியம் 1:30 மணியளவில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில துணை பொதுச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா அவர்கள் கலந்து கொண்டார். இந்தியாவின் கருப்பு நாள் பாபர் மசூதி இடிப்பு தினம் #டிசம்பர்_06 அன்று தஞ்சையில் இராணுவ விமான நிலையத்தை முற்றுகை போராட்டம் நடத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அதிரையில் எதிர்கால கட்சியின் செயல்பாடு குறித்தும் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அதிரை பொறுப்பு குழு தலைவர் S.M.அப்துல் சமது, பொறுப்பு குழு து.தலைவர் M.முகம்மது யூசுப்,குவைத் மண்டலம் முன்னாள் து.செயலாளர் பைசல் அஹமது , அஸ்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_தஞ்சை_தெற்கு_மாவட்டம்.