வரலாறு காணாத பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வு..! கோட்டைப்பட்டினத்தில் மஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்…!!

அறந்தாங்கி.செப்.09., புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம், மணமேல்குடி ஒன்றியம், கோட்டைப்பட்டினத்தில் வரலாறு காணாத பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஒன்றிய செயலாளர் முகம்மது மைதீன் (செல்லஅத்தா) தலைமையில் பெட்ரோலை பாடையேற்றி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக தொழிற் சங்கம் (MJTS) மாவட்ட செயலாளர் சாஜீதீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

முன்னதாக கோட்டைப்பட்டிணம் ஆட்டோஸ்ட்டான்ட் முதல் செக்போஸ்ட் வரை பெட்ரோலை ஒரு கேனில் பிடித்து அதற்கு #பாடை_கட்டி ஊர்வலமாக எடுத்து வந்தனர், தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கோசங்கள் எழுப்பபினார்கள்.

இதில் மாவட்ட துணை செயலாளர் அரசை அபுதாகிர், மாவட்ட மீனவர் அணி செயலாளர் கோட்டை முஜிபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோட்டை அஜ்மீர், மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் அப்துல் கனி, மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் ரியாஸ் அஹமது, ஒன்றிய பொருளாளர் நாகூர் கனி. ஆவுடையார் கோவில் ஒன்றிய செயலாளர் செய்யதுஅபுதாகிர், பொருளாளர் முகம்மது குஞ்சாலி, கோட்டைப்பட்டினம் MJTS நகர செயலாளர் அனீஸ், மாணவர் இந்தியா நகர செயலாளர் உமர் ஹத்தாப், நகர மஜக பொருளாளர் முகம்மது ராசிக் மற்றும் அம்மாப்பட்டினம் நகர பொறுப்பாளர் ஷரீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி மாநில துணைப் பொதுச்செயலாளர் மண்டலம்.ஜெய்னுல்ஆப்தீன், மாவட்ட செயலாளர் கோல்டன்.இ.முபாரக் அலி, மாநில தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் எ.எம்.ஹாரிஸ், ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

இறுதியாக மஜக கோட்டைப்பட்டினம் நகர செயலாளர் ராஜ் முகம்மது நன்றி கூறினார்.

இதில் 100க்கும் மேற்ப்பட்ட மனிதநேய சொந்தங்கள்,மீனவர்கள், பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_புதுக்கோட்டை_கிழக்கு_மாவட்டம்.