மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் கேரளா வெள்ள நிவாரண நிதி..! மஜக பொதுச்செயலாளரிடம் ஒப்படடைப்பு..!!

சென்னை.ஆக.29., #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக #கேரளா_வெள்ள_நிவாரண_நிதி மஜக மாநில செயலாளர் என்.ஏ.தைமிய்யா அவர்களின் தலைமையில் மாவட்ட செயலாளர் பிஸ்மில்லாஹ் கான், மாவட்ட பொருளாளர் அமிர் அப்பாஸ் மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் ரவூப் ரஹிம், பீர் முஹம்மது ஆகியோர் முன்னிலையில் கேரளா வெள்ள நிவாரணத்திற்காக வசூல் செய்த ₹53,500 ரூபாயை பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களிடம் மஜக தலைமையகத்தில் வைத்து நிவாரண நிதியை ஒப்படைத்தனர்.

கேரளா வெள்ளத்திற்க்காக மத்திய சென்னை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட திருவல்லிக்கேணி, துறைமுகம், எழும்பூர் ஆகிய பகுதிகளில் முதல் கட்டமாக வசூல் செய்யப்பட்டது.

இதில் திருவல்லிக்கேணி பகுதி நிர்வாகிகள், துறைமுக பகுதி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_தலைமையாகம்
28.08.2018