தமிழகம் முழுதும் வலுக்கும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்..! பேராவூரணியில் அனைத்து கட்சிகள் ஆர்பாட்டம் மஜக பங்கேற்பு…!!

பேராவூரணி.மே.24., தூத்துக்குடியில் நேற்றும், நேற்று முன்தினமும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டை கண்டித்து பேராவூரணியில் அனைத்து கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) மாவட்ட பொருப்பு குழு தலைவர் பேராவூரணி எஸ்.எம்.எ.சலாம் கலந்து கொண்டு பேசினார். இதில் மஜக மாவட்ட இளைஞரணி செயலாளர் மரக்கவலசை ராஜ் முகமது, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் பேராவூரணி அசார், விவசாய அணி மாவட்ட செயலாளர் ஆதனூர் தினேஷ் , சேதுபாவசத்திரம் ஒன்றிய செயலாளர் சபிக்கான் மற்றும் பேராவூரணி மாணவரணி, இளைஞர்அணி மற்றும் நகர நிறுவாகிகள் அசார், அஜ்மல்,
‌ ஆகிய மஜக மனிதநேய சொந்தங்கள் கலந்து கொண்டனர்.

இதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், திமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக மக்கள்புரட்சி கழகம், திராவிட விடுதலை கழகம் தமிழர் நல பேரியக்கம், மற்றும் பல கட்சியினர், அமைப்பினர் களந்துகொன்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தஞ்சை_தெற்கு_மாவட்டம்.
23.05.2018