எழுச்சியுடன் நடந்த அமீரக மனிதநேய கலாச்சார பேரவை செயற்குழு…

image

அக்.29., மனிதநேய கலாச்சார பேரவையின் அமீரக செயற்குழு கூட்டம் நேற்று 28/10/2016 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு அமீரக செயலாளர் மதுக்கூர்.S.அப்துல் காதர் அவர்கள் தலைமையில் சார்ஜா மர்கஸில் வைத்து நடைபெற்றது.

அமீரக பொருளாளர் அதிரை அஷ்ரப் வரவேற்புரை நிகழ்த்தினார்.கூட்டத்தை இஸ்லாமிய காலச்சார பேரவை(IKP) செயலாளர் திருச்சி அப்துல் ரஹ்மான் அவர்கள் கிராஅத் ஓதி வைத்தும், இஸ்லாத்தில் நற்பண்புகள் குறித்தும் மார்க்க சொற்பொழிவாற்றினார். 

துபை, அபுதாபி, அல்அய்ன், சார்ஜா உள்ளிட்ட அனைத்து மண்டல நிர்வாகிகளும் கலந்து கொண்ட கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மனிதநேய கலாச்சார பேரவையின் அமீரக நிர்வாக வசதிக்காக வேண்டி புதிய நிர்வாகிகளை இனைத்து நிர்வாக விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்படி இனி அமீரக நிர்வாகிளாக கீழ்கண்டவர்கள் செயல்படுவார்கள்..

அமீரக செயலாளர் – மதுக்கூர்.S.அப்துல் காதர்

மூத்த ஆலோசகர் – M.A.சர்புதீன்

பொருளாளர்         – அதிரை அஸ்ரப்

இஸ்லாமிய கலாச்சார பேரவை.  –
திருச்சி அப்துல் ரஹ்மான்

தகவல் தொடர்பு மற்றும் ஊடகம் –
Y.M.ஜியாவுல் ஹக்

துணை செயலாளர்கள் :

நாச்சிகுளம் A.அசாலி அஹமது

K.M.A.முகமது அலி ஜின்னா

H.அபுல்ஹசன்

Y.அப்துல் ரஜாக்

H.M.பதாஹூல்லா

ஆகியோர் தேரந்தெடுக்கப்பட்டனர்.

இஸ்லாமிய கலாச்சார பேரவையின் சார்பாக வார பயான்கள் மற்றும் மாதந்தோறும் தர்பியா வகுப்புகள் அனைத்து மண்டலங்களிலும் தொடர்ச்சியாக நடத்த வேண்டும் எனவும், அதற்கான செயல்திட்டங்கள் மற்றும் ஆலோசனைகள் IKP செயலாளர் திருச்சி.அப்துல் ரஹ்மான் அவர்களால் எடுத்துரைக்கப்பட்டது.

தலைமை வாடகை சம்மந்தமாக அனைத்து மண்டலங்களும் ஒத்துழைப்பது என முடிவு செய்யப்பபட்டது.

அனைத்து மண்டலங்களிலும் நிலுவையில் உள்ள கிளைகளை துரிதமாக அமைத்து நிர்வாகிகளை தேரந்தெடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஊடகசெயலாளர் Y.M.ஜியாவுல் ஹக் நன்றி கூற துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.

தகவல் : ஊடகப் பிரிவு மனிதநேய கலாச்சார பேரவை அமீரகம்.