குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவையின் மண்டல ஆலோசனை கூட்டம்…

image

image

அக்.29., குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை மண்டல ஆலோசனைக் கூட்டம் 28/10/2016 (நேற்று) வெள்ளிக் கிழமை முர்காப் ராஜ்தானி ஹோட்டலில் மண்டல செயலாளர் சகோ. ஹாஜா மைதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

கிராஅத் கைத்தான் கிளை செயலாளர் சகோ. சர்புதீன், வரவேற்புரை மண்டல மக்கள் தொடர்பு செயலாளர் சகோ. அபுபக்கர் சித்திக், நிகழ்த்த இந்நிகழ்ச்சியை மண்டல ஆலோசகர் சகோ. முசாவுதீன் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.

இதில் மண்டல வரவு செலவு விபரங்களை மண்டல பொருலாளர் சகோ. முஹம்மது நபீஸ் அவர்கள் ஒப்படைக்க வரவு செலவு விவரங்கள் சரிபார்க்கபட்டது, இதனை தொடர்ந்து  மஜகவில் இணைந்த சகோதரர்கள் தங்களது அறிமுக உரை நிகழ்த்தினார்கள்.

இதனைத் தொடர்ந்து வரும் டிச.23 ஆம் தேதி குவைத்தில் மண்டல மாநாடு நடத்துவது குறித்து அனைவரிடத்திலும் ஆலோசனைகள் கேட்கப்பட்டு அதற்கான முன் ஏற்பாடுகள் குறித்து மண்டல ஆலோசகர் சகோ. முசாவுதீன் அவர்கள் விளக்கினார்.

மாநாட்டின் பணிகளுக்கு பல்வேறு குழுக்கள் தேர்வு செய்து மாநாடு சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டது. இறுதியாக சால்வா கிளை பொருலாளர் சகோ முகம்மது மன்சூர் அவர்கள் நன்றியுரை கூறி துஆவுடன் நிறைவு பெற்றது.

தகவல் : மனிதநேய கலாச்சார பேரவை (மனிதநேய ஜனநாயக கட்சி) ஊடக பிரிவு குவைத் மண்டலம்