இந்தியாவில் நடைபெற்று முடிந்த 18-வது மக்களவை தேர்தலின் முடிவுகள் வந்தவண்ணம் உள்ளது. மோடியிஸத்திற்கும் - ஃபாஸிசத்திற்கும் மாற்றாக ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்ற புரிதலோடு இந்தியா கூட்டணிக்கு மக்கள் வாக்களித்திருப்பதை புரிய முடிகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வென்றுள்ளது. தமிழக முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான அண்ணன் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் எழுச்சிகரமான பரப்புரைக்கு கிடைத்த வெற்றியாக இதனை நாடு பார்க்கிறது. துல்லியமான தகவல்கள், நிராகரிக்க முடியாத வாதங்கள், ஒயாத பயணங்கள் என அவர் திராவிடப் புயலாய் மாறி; சுழன்றடித்து ஆற்றிய உழைப்புக்கு; தமிழ்நாட்டு மக்கள் உரிய அங்கீகாரத்தை தந்துள்ளனர். முன்பு 2004-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கலைஞர் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி 40 இடங்களில் வென்றது. அதே சாதனையை தளபதியார் அவர்கள் தற்போது கடும் நெருக்கடிகளை கடந்து நிகழ்த்தியிருக்கிறார். ஆம். அவர் பெற்றிருக்கும் வெற்றிமாலையில் 40 முத்துக்கள் ஜொலிக்கின்றன. நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாப்பதில் தமிழ்நாட்டின் பெரிய பங்களிப்பை அவர் உறுதி செய்திருக்கிறார். அவர் தலைமையில் இந்தியா கூட்டணியோடு இணைந்து பணியாற்றியதில் மனிதநேய ஜனநாயக கட்சி பெருமிதம் கொள்கிறது. இந்தியாவை பாதுகாக்கும் அறப்போரில் அவரது தலைமையில்
Month:
ரத்ததான சேவை 90 நாட்களில் 150 யூனிட் ரத்ததானம் நாகை மாவட்ட மஜகவின் தொடரும் மனித நேயப் பணிகள்…
ஜூன்,03 தமிழ்நாடு முழுக்க மனிதநேய ஜனநாயக கட்சியின் மருத்துவ சேவை அணி சார்பில் உயிர் காக்கும் ரத்ததான சேவைகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. நாகை மாவட்டத்தில் மட்டும் கடந்த 90 நாட்களில் 150 யூனிட்டுகள் ரத்தம் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளிலிருந்து விடுக்கப்பட்ட வேண்டுகோள் தவிர, நேரடி உதவி கோரல்கள் என உதவி கேட்டவர்கள் அனைவருக்கும் ரத்ததானம் கொடுக்கப்பட்டிருக்கிறது. நாகை மாவட்ட மருத்துவ சேவை அணி துணை செயலாளர் N. உமர் முக்தார் அவர்கள் தலைமையில் இப்பணி சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் ரத்ததான சேவையில் தொடர்ந்து முன்னணி வகிக்கும் மஜகவின் சேவைகளுக்கு தலைவர் மு.தமிமுன் அன்சாரி பாராட்டு தெரிவித்துள்ளார். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #நாகை_மாவட்டம் 03.06.2024.
சென்னையில் CPM பேரணி பாலஸ்தீனர்களுக்கு எதிரான படுகொலையை நிறுத்துக மஜக வினர் பங்கேற்று ஆதரவு…
ஜூன்.02., ஆக்கிரமிப்பு இஸ்ரேல், பாலஸ்தீனர்களுக்கு எதிராக நடத்திவரும் இனப்படுகொலைக்கு எதிராக உலகமெங்கும் போராட்டங்களும் கண்டன பேரணிகளும் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய கட்சி என்ற ஒரு பொறுப்புணர்வோடு இப் பிரச்சனையில் களமிறங்கி உள்ளது. சென்னையில் இன்று மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPM) சார்பில் கண்டன பேரணியும், ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இதற்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவளிப்பதாக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் அறிக்கை விடுத்திருந்தார். சி.பி.ஐ மைய சென்னை மாவட்ட செயலாளர் செல்வா அவர்களது தலைமையில் இன்று நடைபெற்ற பேரணி சென்னையில் உள்ள புதுப்பேட்டை பாலம் அருகிலிருந்து தொடங்கப்பட்டது. கண்டன முழக்கங்கள், பாடல்கள், கவிதைகள், பறை இசை நிகழ்வுகள் என நிகழ்வுகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. இதில் மஜக-வினர் திரளானோர் பங்கேற்றனர். நிறைவாக மஜக மாநிலச் செயலாளர்கள் பல்லாவரம் ஷஃபி, நாகை முபாரக், கலைக்குயில் இப்ராகிம், மாநிலத்துணைச் செயலாளர்கள் அரிமா. அஸாருதீன், பேரா.சலாம் உள்ளிட்டோர் CPM மாநிலச் செயலாளர் தோழர். பாலகிருஷ்ணனை சந்தித்து, CPM எடுத்த இம்முயற்சிக்கு தங்களது புரட்சிகர பாராட்டுகளை கூறினர். அவரும் மஜக-வின் ஆதரவுக்கு நன்றி கூறினார். இதில் மாணவர் இந்தியா தலைவர் புரட்சி முழக்கம் பஷீர் அஹமது, MJVS மாநில செயலாளர் பிஸ்மில்லா கான், மத்திய
திரு.வி.கா நகரில் பொதுமக்களுக்கு குளிர்பானம் மோர் வழங்கிய மஜகவினர் மஜக மாநில நிர்வாகிகள் பங்கேற்பு…..
ஜூன்.02., மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், வடசென்னை மேற்கு மாவட்ட மஜக சார்பில் திரு.வி.க நகர் பகுதியில் பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் - மோர் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் ஹனீஃப் அவர்களது தலைமையில் இன்று நடைப்பெற்றது. இதில் மாநில செயலாளர்கள் பல்லாவரம் ஷஃபி, நாகை. முபாரக் ஆகியோர் கலந்துக்கொண்டு பொதுமக்ளுக்கு குளிர்பானங்களை வழங்கி நிகழ்வை தொடங்கி வைத்தனர். சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் தவிக்கும் மக்களுக்கு தாகம் தீர்க்க குளிர்பானங்கள் வழங்கிய மஜக-வினரை பொதுமக்கள் நன்றியுடன் பாராட்டினர். இதில் மாநில துணைச்செயலாளர் அரிமா.அஸாருதீன், மாணவர் இந்தியா தலைவர் புரட்சி முழக்கம் பஷீர் அஹமது, மாவட்ட பொருளாளர் அப்துல் ரசாக், மாவட்ட துணைச்செயலாளர் அல்லா பகஷ் மற்றும் மாவட்ட, பகுதி நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வடசென்னை_மேற்கு_மாவட்டம் 02.06.2024
காணொளியில் மஜக கூட்டம் இஸ்ரேலின் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக ஜனநாயக சக்திகள் திரள வேண்டும் UAPA சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்துவதை தவிர்க்க வேண்டும் மஜக சிறப்பு நிர்வாகக் குழுவில் தீர்மானங்கள்…
ஜூன்.02., மனிதநேய ஜனநாயக கட்சியின் சிறப்பு நிர்வாகக் குழு கூட்டம் காணொளி வழியாக தலைவர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் நேற்று நடைப்பெற்றது. இதில் தலைமை நிர்வாகிகள், மாநிலத் துணைச் செயலாளர்கள், மாநில அணிச் செயலாளர்கள் பங்கேற்றனர். இதில் கட்சியின் கடந்த 6 மாத கால செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு பாரபட்ட கட்சியின் அனைத்து மட்ட நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கேரளா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் தேர்தல் பணியாற்றிய நிர்வாகிகளின் செயல்பாடுகளுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிறைவாக பொதுச் செயலாளர் மெளலா. நாசர் அவர்கள் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவுற்றது. அதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அவை பின்வருமாறு... 1. இஸ்ரேலுக்கு கண்டனம் பாலஸ்தீனத்தின் ரஃபா நகரில் அகதிகளாக அடைக்கலமாகியிருக்கும் மக்கள் மீது இஸ்ரேல் நடத்தும் பயங்கரவாத யுத்தத்தை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. சர்வதேச சமூகம் மற்றும் ஐ.நா சபையின் எதிர்ப்பையும் மீறி இஸ்ரேல் நடத்தும் இந்த அராஜகத்திற்கு எதிராக இந்தியாவில் செயல்படும் ஜனநாயக சக்திகள் அணி திரள வேண்டும் என்றும் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது 2. UAPA சட்டத்தை அமல்படுத்த வேண்டாம் மக்கள் விரோத சட்டம் என மனித உரிமை அமைப்புகளால்