சென்னை.ஜூன்.30., கடந்த (29.06.2018) நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் #மனிதநேய_ஜனநாயக_கட்சியின் பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள், அதன் ஒரு பகுதியாக பேசிய உரையின் சுருக்கம். (பகுதி : 03) மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே... NEET தேர்வு என்பது பின் தங்கிய சமூகங்களுக்கும், கிராமப்புற மாணவ, மாணவர்களின் நலன்களுக்கும் எதிரானது என்பதாலயே இந்த அவையில் உள்ள அனைவரும் ஒரே குரலில் எதிர்க்கிறோம். தற்போது, இதில் அரசுப் பள்ளிகளில் பயின்று NEET தேர்வில் வெற்றி பெற்றவர்கள், அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் வசதி ஏற்படுத்தும் வகையில் 3% சதவித உள் இட ஒதுக்கீட்டை, அதில் வழங்கி சமூக நீதியை நிலை நாட்ட முயற்சி எடுக்க வேண்டும். இது மஹராஷ்டிரா, ஆந்திராவில் நடைமுறையில் உள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் J. P நட்டா அவர்கள், 15-04-2018 அன்று சென்னை விமான நிலையத்தில் பேட்டியளிக்கும் போது, இதற்கான உள் ஒதுக்கீட்டு உரிமை மாநில அரசுகளுக்கு இருக்கிறது என்று கூறியதை அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இவ்வாறு அவர் பேசினார். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சட்டப்பேரவை_வளாகம்.
Month:
ராமசாமி படையாச்சிக்கு அரசு விழா…! வரவேற்று பேசிய மஜகவுக்கு குவியும் பாராட்டு…!!
சென்னை. ஜூன்.30., சட்டசபையில் கடந்த (29-06-2018) தமிழக முதல்வர் எடப்பாடியார் 110 விதிகளின் கீழ் ராமசாமி படையாட்சிக்கு அரசு சார்பில் விழா எடுக்கப்படும் என அறிவித்தார். அதற்கு #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் நன்றி தெரிவித்து பேசியதாவது. மிக முக்கியமாக தமிழ்நாட்டில் சமூக நீதிக்கு முன்னுதரணமாக திகழ்ந்த தலைவர்களில் ஒருவர் பெருமைக்குரிய #ஐயா_ராமசாமி_படையாட்சியார் அவர்கள். வருங்கால தலைமுறை அவரை மறந்துவிடுமோ என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில், அவருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் நமது முதல்வர் அவர்கள் அவரது பிறந்த தினத்தை அரசு விழாவாக அறிவித்தது, வன்னிய சமுதாய மக்களுக்கு மட்டுமல்ல, சமூகநீதிக்காக செயல்படக்கூடிய அத்தனை பேரின் உள்ளங்களிலும் மகிழ்ச்சியை தரக்கூடிய ஓர் அறிவிப்பாக இருக்கிறது. (மேசை ஒலி அதிர்ந்தது) முதல்வர் 110 விதிகளின் கீழ் அறிவித்த பிறகு மு.தமிமுன் அன்சாரி MLA மட்டுமே இதை எழுந்து வரவேற்று பேசினார். இதனால் அதிமுக, திமுக வில் உள்ள வன்னிய சமூக MLA க்கள் அவரை சந்தித்து நன்றி கூறினர். அதன்பிறகு அலைபேசி வாயிலாக பல வன்னிய சமூக பிரமுகர்களும், திரைப்பட கலைஞர்களும், பத்திரிக்கை நண்பர்களும் தங்களது நன்றிகளை கூறினர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சட்டப்பேரவை_வளாகம்.
மொழி வழி சிறுப்பான்மையினரின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும்…! சட்டப்பேரவையில் மஜக பொதுச்செயலாளர் வேண்டுக்கோள்…!!
சென்னை.ஜூன்.30., நேற்று (29.06.2018) நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் #மனிதநேய_ஜனநாயக_கட்சியின் பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள், அதன் ஒரு பகுதியாக பேசிய உரையின் சுருக்கம். மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே... கடந்த 125 ஆண்டுகளாக வேலூர், சேலம், கடலூர் ஆகிய ஊர்களில் நடைமுறையில் இருந்த உருது மொழி சரகங்கள் கலைக்கப்பட்டுள்ளது, அதை மீண்டும் ஏற்படுத்த வேண்டும். வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த சுமார் 200 உருதுவழி தொடக்க, நடுநிலை பள்ளிகளை உள்ளடக்கிய வேலூர் உருது சரகத்திற்கு இரண்டு வட்டார கல்வி அலுவலர்கள் பணியிடங்களை வழங்கவும். #உருதுவழி_நிதி உதவிபெரும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு BT மற்றும் தமிழாசிரியர் பணியிடங்களை நிரப்புமாறும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். தகவல் : #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சட்டப்பேரவை_வளாகம்
திருப்பூரில் புதிய காவல்துறை ஆணையாளருடன் மஜக நிர்வாகிகள் சந்திப்பு.!
திருப்பூர்.ஜுன்.29., திருப்பூர் மாவட்ட காவல்துறை ஆணையாளராக பொறுப்பேற்றுள்ள திரு.மனோகர் IPS அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்து வாழ்த்து கூறினர். அப்போது திருப்பூரில் நிலவும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் குறித்தும் எடுத்துரைத்தனர். இந்த சந்திப்பின் போது மாவட்ட செயலாளர் ஹைதர்அலி, மாவட்ட பொருளாளர் முஸ்தாக் அகமது, மாவட்ட துணைச்செயலாளர்கள் அக்பர் அலி, லியாகத் அலி ஆகியோர் உடனிருந்தனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #திருப்பூர்_மாவட்டம் 29-06-2018
பிறைக்கமிட்டி அமைக்க வேண்டும்..! சட்டப்பேரவையில் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA வேண்டுகோள்..!!
#மனிதநேய_ஜனநாயக_கட்சி பொதுச் செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் இன்று சட்டப்பேரவையில் பேசிய உரையின் சுருக்கம் (29.06.18) (பகுதி - 01) முஸ்லிம்கள் தங்களது இரண்டு பண்டிகைகளான ரமலான் பெருநாளையும், பக்ரீத் பெருநாளையும் பிறை தென்படுவதை பார்த்து முடிவு செய்து கொண்டாடுகிறார்கள். இதற்காக காஜிகள் பல மாவட்டங்களில் உள்ளனர். தலைமை காஜி சலாவுதீன் அவர்கள் இருக்கிறார், அவர் எனக்கு தனிப்பட்ட முறையில் வேண்டப்பட்டவர், நல்ல பண்பாளர். பிறை பார்த்தலில் பிழைகள் ஏற்படும்போது அவரை பலர் விமர்சிக்கிறார்கள். அது நியாயமல்ல. எனவே தமிழக அரசு #தலைமை_பிறை_கமிட்டி ஒன்றை உருவாக்கி அதை வக்பு வாரியத்தின் கீழ் கொண்டு வரவேண்டும். அந்த கமிட்டியில் தலைமை காஜி, வக்பு வாரிய தலைவர், ஹஜ் கமிட்டி தலைவர், அறிவியல்துறை பேராசிரியர் ஒருவர், ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் ஜமாத்துல் உலமாவை சேர்ந்து இருவர், கோவை, கன்னியாகுமரி, நாகை, திருச்சி, மாவட்டங்களிலிருந்து தலா ஒரு மாவட்ட காஜி ஆகியோரை கொண்ட 11 பேர் இடம் பெற வேண்டும் என்ற ஆலோசனையை இந்த அவையில் முன் வைக்கிறேன். இதை இந்த அரசு அமுல்படுத்த வேண்டும் என்று கொள்கிறேன். என்று கூறி இந்த உரையை முடித்தார்.. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சட்டப்பேரவை_வளாகம்