மார்ச்.22., விவசாயிகளிடம் கடன் வசூல் என்கின்ற பெயரில் வணிக கூட்டுறவு அமைப்புகள், பொதுத்துறை வங்கிகள் காவல்துறை உதவியோடு அவமானப்படுத்தி அச்சுறுத்தி தற்கொலைக்கு தூண்டுவதை தடுத்து நிறுத்திட வலியுறுத்தியும், தற்கொலை செய்துக்கொண்ட அரியலூர் அழகர் குடும்பத்திற்க்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் சென்னையில் 22.03.2016 (இன்று) சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கினைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நடைப்பெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு சமூக சேவை அமைப்புகள்,மாணவர் அமைப்புகள் கலந்துக் கொண்டனர் இதில் மாணவர் இந்தியா சார்பாக அஸாருதீன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
தமிழகம்
தமிழகம்
தலைமை காஜியுடன மஜக அவைத்தலைவர் சந்திப்பு!
மார்ச்.22., இன்று மாலை சென்னையில் தலைமை காஜி சலாவுதீன் அவர்களை மனிதநேய ஜனநாயகக் கட்சியின் (MJK)அவைத்தலைவர் மௌலான.சம்சுதின் நாசர் உமரி அவர்கள் நேரில் சந்தித்து மார்ச் 26, அரசியல் மறுமலர்ச்சி மாநாட்டிற்கான அழைப்பிதழை நேரில் வழங்கினார். ஏற்கனவே மஜக வை நன்கு அறிந்திருந்த காஜி அவர்கள்,பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி அவர்களை பற்றி நலம் விசாரித்தார்.பிறகு மாநாட்டு பணிகள் குறித்தும்,கட்சி குறித்தும் நல்ல முறையில் கலந்துரையாடி,தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார். இச்சந்திப்பின் போது தலைமை செயற்குழு உறுப்பினர் மூஸா ஹாஜியார், தென் சென்னை மாவட்ட இளைஞர் அணி செயலாளர் MMH.முபாரக் ஆகியோர் உடனிருந்தனர். -தகவல் மஜக ஊடகப்பிரிவு
ஒரு வரலாறு உருவாகிறது.! மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி கடிதம்
#பேரன்புக்குரிய_மனிதநேய_சொந்தங்களே .. #ஏக_இறைவனின்_அமைதியும் , #சமாதானமும்_உரித்தாகுக ! உயிருக்குயிரான உங்களுக்கு ஒரு மடல் எழுத வேண்டும் என்று பல நாட்களாக முயன்று , அது இன்று தான் சாத்தியமாகியிருக்கிறது . கடுமையான மன அழுத்தங்கள் , ஓய்வற்ற பயணங்கள் , இடைவிடாத அலைப்பேசி அழைப்புகள் , தொடர்ந்து நிகழும் மக்கள் சந்திப்புகள் என தினமும் இயங்க வேண்டியிருக்கிறது . அவற்றுக்கு மத்தியில் தான் ஒரு நள்ளிரவில் இம்மடலை வரைகிறேன் . உங்களோடு பேசும்போதும் , உங்களுக்காக உழைக்கும் போதும் , உங்களுக்காக எழுதும் போதும் மனமும் ,உடலும் சோர்விலிருந்து விடுபட்டு சிறகு முளைத்த மகிழ்ச்சியில் குதூகலிக்கிறது என்பதே உண்மை . #சொந்தங்களே…! கடந்த அக்டோபர் 6 - 2015 தொடங்கி நாம் நடத்தி வந்த உட்கட்சி ஜனநாயகத்திற்கான போராட்டம் கடந்த பிப்ரவரி 25 – 2016 அன்றுடன் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது . எத்தனையோ உண்மைகளும் , நியாயங்களும் புதைக்கப்படலாம் . ஆனால் நியாய தீர்ப்பு நாளில் இறைவனுக்கு முன்னால் அவற்றை நாம் முன்னிறுத்துவோம் . இந்த 4½ மாதங்களில் வன்முறைகள் , அவதூறுகள் , அராஜகங்கள் ஆகியவற்றை துணிச்சலோடு எதிர்கொண்டோம்
மஜக சென்னை மண்டல ஆலோசனை கூட்டம்
மஜக தலைமையகத்தில் வடசென்னை, தென்சென்னை,மத்திய சென்னை, காஞ்சி வடக்கு, காஞ்சி தெற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு ஆகிய மாவட்டங்களின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மார்ச் 26 அரசியல் மறுமலர்ச்சி மாநாடு தொடர்பான ஆயத்தப் பணிகள் குறித்து கலந்தாலோசனை நடைபெற்றது. இதில் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, பொருளாளர் ஹாரூன் ரஷீது, மாநில செயலாளர்கள் சாதிக் பாஷா, தைமிய்யா மாநில துணை செயலாளர் புதுமடம் அனீஸ், மீனவர் அணி மாநில செயலாளர் பார்த்திபன், மனித உரிமைகள் அணி செயலாளர் பல்லாவரம் ஷாஃபி ஆகியோர் கலந்துக்கொண்டனர். தகவல்: மஜக ஊடகப் பிரிவு (சென்னை)
மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாவட்டத்தின் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்…
இறைவன் நாடினால் வருகின்ற 13-03-2016 அன்று கோவை மாநகரில் கோட்டை மேடு வின்சென்ட் ரோட்டில் மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாவட்டத்தின் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்... உரைகள் பொதுச்செயலாளர் : M.தமீமுன் அன்சாரி அவர்களும்,பொருளாளர் : ஹாரூன் ரஷீத் அவர்களும் சிறப்புரையாற்றுகிறார்கள். மஜக சொந்தங்களே அணித்திரண்டு வாரீர்...