நாகை தொகுதி முட்டம் அரசினர் தொடக்கப்பபள்ளியில் காமராஜர் பிறந்த தினவிழா,கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. இதில் சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்று உரையாற்றினார். போட்டியில் வெற்றிபெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகளையும் வழங்கினார். -தகவல்- நாகை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
தமிழகம்
தமிழகம்
நாகை வர்த்தக குழுமம் சார்பில் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கு வரவேற்பு
நாகை வர்த்தக குழுமம் சார்பில் நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சேம்பரில் இருக்கும் முக்கிய பிரமுகர்கள் ஒவ்வொருவரும் நாகை தொகுதிக்கு செய்ய வேண்டிய திட்டங்கள்,பணிகள் குறித்து கருத்துக்கள் கூறினர். அவர்களுக்கு மத்தியில் ஏற்புரை நிகழ்த்திய M.தமிமுன் அன்சாரி.MLA அவர்கள், நாகப்பட்டிணத்தில் தொகுதி ஆலோசனைகுழு அமைக்கப்படுகிறது.இதில் வர்த்தக குழுமத்தின் தலைவரும் இடம் பெறுவார். இக்குழு இரண்டு மாதத்திற்கு ஒருமுறை கூடும்.அதில் தொகுதி பணிகள் யாவும் கண்காணிக்கப்பட்டு விவாதிக்கப்படும் என அறிவித்தார்.நாகையின் தொகுதியின் வளர்ச்சி,சேம்பரின் வழிக்காட்டல்படி முன்னெடுக்கப்படும் என்றும் கூறினார். -தகவல் - நாகை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்
காஷ்மீரில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை கண்டித்து மஜக சார்பில் மாபெரும் ரயில் மறியல் போராட்டம் !
மஜக தலைமையகம் அறிவிப்பு ! ============================ காஷ்மீரில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை கண்டித்து மஜக சார்பில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, திருவாரூர் , கடலூர், திண்டுக்கல், ஈரோடு, வேலூர் ஆகிய பத்து மைய்யங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் . வருகின்ற ஜூலை 22 வெள்ளி, ஜூலை 23 சனி, ஜூலை 24 ஞாயிறு ஆகிய மூன்று தினங்களில், தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்படும். ஜனநாயக வழியில் நடைபெறும் இப்போராட்டத்தில். பொது மக்களுடன் சமூகநீதி போராளிகளும், மனித உரிமை ஆர்வளர்களும் பங்கேற்பர் இவண்: M.தமிமுன் அன்சாரி MLA பொதுச் செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 18/07/2016
நாகை வடக்கு மாவட்டம் நக்கம்பாடியில் மஜக உதயமானது.
ஜுன்-10 அன்று மாலை 4:30 மணியளவில் நக்கம்பாடியில் நடைபெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின் கிளை கூட்டத்தில் கிளை செயலாளராக S.முபாரிஸ், கிளை பொருளாளர் A.முகம்மது ஷேக் ,H.முஹம்மது ஹாலித், S.சமீர் அக்தர், S.சாகுல் ஹமீது இளைஞரணி செயலாளராக J.பாசித் ஆகியோர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் N.M.மாலிக் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் A.J.சாகுல் ஹமீது,கிளியானுர் அபுசாலி, மயிலாடுதுறை ஒன்றிய செயலாளர் ஜெப்ருதீன், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் தைக்கால் ஷாஜஹான் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் ஆக்கூர் ஷாஜஹான் வரவேற்புரையாற்றினார். கூட்டத்தின் இறுதியில் கிளை செயற்குழு உறுப்பினர் I.முனவர்தீன் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது. -மஜக ஊடகபிரிவு
முத்துபேட்டையில் மஜக பொதுச்செயலாளர்.
நேற்று முத்துப்பேட்டைக்கு *மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA* அவர்கள் வருகை தந்தார்.ஆசாத் நகர் பள்ளிவாசலில் நடைபெற்ற அசாருதீன் திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். முத்துப்பேட்டை மக்களுடன் நெருங்கிய தோழமை வைத்திருக்கும் பொதுச் செயலாளருக்கு பொது மக்களும், ஜமாத்தார்களும், பிரமுகர்களும் கட்டிதழுவி தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துக்கள் கூறினர். தொடர்ந்து ஏராளமானோர் அவர் தங்கியிருந்த இல்லத்திற்கு வந்து வாழ்த்துக்கள் கூறினர். முத்துப்பேட்டை சமூக ஆர்வலரும், தொழிலதிபருமான *TVS.Dr.ஹைதர் அலி* அவர்களின் அழைப்பினை ஏற்று அவர் இல்லத்துக்கு சென்று உரையாடினார். அன்று மாலை முத்துப்பேட்டை மஜக நகர ஆலோசனை கூட்டத்திலும் பங்கேற்றார். பிறகு ஜாம்புவானோடை சென்று முத்துப்பேட்டை தர்ஹா தலைவரும், தர்ஹாக்கள் ஒருங்கிணைப்பு பேரவையின் நிறுவனருமான S.S.பாக்கர் அலி சாஹிப் அவர்களை சந்தித்தார். நாகை தொகுதியில் தனது வெற்றிக்கு பணியாற்றியதற்கு மஜக சார்பில் நன்றி தெரிவித்துகொண்டார். -மஜக ஊடகப்பிரிவு