புதுகை.ஏப்.15., நேற்று 14/04/2017 வெள்ளிக்கிழமை புதுக்கோட்டை கிழக்கு மாவட்டத்தின் சார்பாக ஆவுடையார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட பொன்போத்தி கிராமத்தில் இஸ்லாமியர்களின் வணக்கஸ்தலமான பள்ளிவாசல் அருகில் (25 மீட்டர் தூரத்தில்) சில தினங்களுக்கு முன்பு புதிதாக டாஸ்மார்க் கடை திறக்கப்பட்டிருந்தது. அந்த டாஸ்மார்க் கடையை அகற்ற கோரியும், இனி வரும் காலங்களில் பொன்பேத்தி கிராமத்திற்க்குல் டாஸ்மார்க் வைக்க வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதில் மஜக கிழக்கு மாவட்ட செயலாளர் இ.முபாரக் அலி, மேற்கு மாவட்ட செயலாளர் துரை முகம்மது, தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் A.முகம்மது ஹாரிஸ் ஆகியோருடன் கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் அஜ்மீர் அலி, மாவட்ட பொருளாளர் சேக் இஸ்மாயில், மாவட்ட துணை செயலாளர்கள் ஜலில் அப்பாஸ், ஒலி முகம்மது, சையது அபுதாஹீர், அறந்தாங்கி நகர அவைத்தலைவர் அப்துல் ஹமீது, நகர செயலாளர் அப்துல் ஜமின், நகர பொருளாளர் ஜகுபர் சாதிக், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் பாஷித் கான், மேற்கு மாவட்ட பொருளாளர் ரஹீம் தாலிப், மேற்கு மாவட்ட துணை செயலாளர் அப்துல் ஹமீது, மாவட்ட மருத்துவ அணி செயலாளர் சீனிவாசன்,
தமிழகம்
தமிழகம்
14வது நிதிக்குழு மானியபணிகள் நாகை MLA அதிகாரிகளுடன் கலந்தாய்வு…
நாகை. ஏப்.15., நாகப்பட்டினம் தொகுதிக்கு உட்பட்ட திருமருகல் தாலுக்காவில் குடிநீர் மற்றும் சாலைப்பணிகள் குறித்து BDO மற்றும் ஊராட்சி செயலாளர்கள் , அதிகாரிகளுடன் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி MLA ஆய்வு மேற்கொண்டார் . 14-வது நிதிக்குழு மானியத்தில் ஒதுக்கப்பட்ட 60 லட்சம் ரூபாய்க்கான 219 பணிகளில் 190 பணிகளை விரைந்து முடித்ததற்காக அதிகாரிகளை பாராட்டினார் . அதுபோல ஒருங்கிணைந்து ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதியில் ஒதுக்கப்பட்ட 22 லட்சத்தில் 16 பணிகள் முடிக்கப்பட்டிருக்கிறது . மீதி 12 பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் . இதுதவிர திருமருகல் ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சிகளுக்கு 2 கோடியே 19 லட்சத்தில் 117 பணிகள் புதிதாக தேவைப்படுவதாகவும் , அதை கலெக்டரிடம் பரிந்துரைக்க வேண்டும் என்றும் , வந்த கோரிக்கைகளை பரிசீலிப்பதாகவும் , கலெக்டரிடம் பேசுவதாகவும் கூறினார் . தற்போது திருமருகலில் குடிநீர் பிரச்சனைகள் தட்டுப்பாடு இல்லாத அளவுக்கு சீர் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது . தகவல் : நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் 15-04-2017
குடியாத்ததம் காயிதே மில்லத் நகரில் நடைபெற்ற மஜக நிகழ்ச்சிகள்…
வேலூர்.ஏப்.15., வேலூர் மேற்கு மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் காயிதே மில்லத் நகரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக கொடியேற்றுதல், மரக்கன்றுகள் நடுதல் மற்றும் கருவேலமரங்கள் அகற்றும் பணி ஆகிய நிகழ்ச்சிகள் ஒன்றிய செயலாளர் Y.இம்தியாஸ் தலைமையில் கிளை செயலாளர் R.T.சலாம் முன்னிலையில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஜே.எம்.வசிம் அக்ரம்.Bsc அவர்கள் கலந்து கொண்டு கட்சியின் கொடியினை ஏற்றிவைத்தும், மரக்கன்றுகளை நட்டும், கருவேலமரம் அகற்றும் பணியையும் தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட துணை செயலாளர் SMD.நவாஸ், மாவட்ட மருத்துவ அணி பொருளாளர் S.M.நிஜாமுதீன், நகர செயலாளர் S.அணீஸ், நகர பொருளாளர் V.முபாரக் அஹமத், ஒன்றிய பொருளாளர் W.அமீன், ஒன்றிய து.செயலாளர்கள் Y.அம்ஜத், M.இம்தியாஸ், A.சாதிக், ஒன்றிய.இ அ.செயலாளர் இம்ரான், நகர துணை செயலாளர்கள், சலீம், மற்றும் நகர இளைஞர் அணி செயலாளர் முஹம்மத் கவுஸ், நகர ஒன்றிய மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING வேலூர் மேற்கு மாவட்டம். 15.04.2017
நாகை பாக்கம் கோட்டூர் மஜக கிளை சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு…
நாகை.ஏப்.15, நேற்று 14.04.2017 நாகப்பட்டினம் தெற்கு மாவட்டம் திருமருகல் ஒன்றிய பாக்கம் கோட்டூர் கிளை மஜக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. இந்நிகழ்வில் கோட்டூர் ஹசன், கிளை செயலாளர் உஸ்மான், பொருளாளர் இம்ரான் உள்ளிட்ட கிளை நிர்வாகிகள் கலந்துக்கொண்டு பொதுமக்களுக்கு நீர், மோர் வழங்கினர். தகவல் ; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, #MJK_IT_WING 14.04.2017
கீராநல்லூர் ஜமாத் நிர்வாகிகள் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வுடன் சந்திப்பு…
நாகை.ஏப்.13., சீர்காழி தொகுதில் உட்பட்ட கீராநல்லூர் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் ஊர் மக்கள் சார்பாக மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினரும்மான M.தமிமுன் அன்சாரி MLA அவர்களை சந்தித்து தாங்கள் வசிக்கும் ஊரில் விதி முறைக்கு எதிராக நிலத்தடிநீரை மாசுபடுத்தும் இறால் பண்ணை அமைக்க முயற்சிக்கும் ஆதிக்க சக்திகளின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். உடனே சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பாரதி அவர்களை அலைபேசியில் தொடர்பு கொண்ட தமிமுன் அன்சாரி MLA அவர்கள் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். மேலும் ஜமாத் நிர்வாகிகளை சந்தித்து பேசவும் கேட்டுக் கொண்டார்கள். இந்த விசயத்தை அமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டர் கவனத்திற்கு உடனே கொண்டு செல்வதாகவும் வாக்குறுதி அளித்தார். M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் உணர்வு பூர்வமான நடவடிக்கைக்கு ஜமாத் நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர். இச்சந்திப்பிற்கு ஏற்பாடு செய்த மஜக மாநில துணைச் செயலாளர் தோப்புத்துறை சேக் அப்துல்லாஹ், தம்மாம் மண்டல IKP அல் கோபர் கிளை பொருளாளர் உமர் முக்தார், உஸ்மான், நாகை வடக்கு மாவட்ட மஜக செயலாளர் மாலிக் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர். தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி.