தேனி. ஆக.07., மனிதநேய ஜனநாயக கட்சி தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் காவல்துறையின் பல எதிர்புகளை தாண்டி மஜகவின் கொடி ஏற்றபட்டது. இதில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீத் M.com அவர்கள் கொடி ஏற்றிவைத்து சிறப்புரை நிகழ்த்தினார்கள். மற்றும் உத்தமபாளையத்தில் மேலும் பல இடங்களில் கொடியேற்றம் நடத்துவதற்கு காவல்துறைஅனுமதி தரமறுத்த இடங்களை ஆய்வு மேற்கொண்டு காவல் துறை உயர் அதிகாரிகளிடம் முறையிட்டு அனுமதி வாங்கி தருவதாக கூறினார். பிறகு தேனி மாவட்டம் மஜக நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடல் செய்து நிர்வாகிகளுக்கு கட்சியின் வளர்ச்சி பற்றி ஆலோசனை வழங்கினார். அதன்பின் நிர்வாகிகளின் சந்தேகங்களுக்கு சிறப்பாக விளக்கம் அளித்தார். இந்த கொடியேற்று நிகழ்ச்சி மற்றும் ஆலோசனை கூட்டத்தை மஜக தேனிமாவட்ட செயலாளர் M.M.ரியாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. உடன் மாநில துனை பொதுச் செயலாளர் மன்னை செல்லசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் கரிம், மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் சிக்கந்தர் பாஷா, கம்பம் தன்விர் ஆகியோருடன், மாவட்ட நிர்வாகிகள் காதர், தமீம், ஷேக், ஷபிர், காதர் (Western mobile), உத்தமபாளையம் நகர செயலாளர் உபைதுர் ரஹ்மான், கம்பம் நகர செயலாளர் அயூப்கான், மருத்துவ அணி லியாகத் அலி ஆகியோர், மேலும்
தமிழகம்
தமிழகம்
தூத்துக்குடியில் மணல் குவாரி அமைக்க தடை விதிக்க கோரி மஜக மனு..!
தூத்துக்குடி.ஆக.07., இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்டம் சார்பாக தாமிரபரணி நதிநீர் ஓடும் ஆறாம்பண்ணை மற்றும் கொங்கராயகுறிச்சி பகுதியில் மணல் குவாரி அமைக்க தடை விதிக்க கோரி மாவட்ட ஆட்சியாளரிடம் நேரடியாக மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை பெற்றுகொண்ட ஆட்சியாளர் அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்த நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன், மாவட்ட பொருளாளர் நவாஸ், மாவட்ட துணை செயலாளர் முகம்மது நஜிப், மாவட்ட தொழிற் சங்க செயலாளர் (MJTS) ராஸிக் முஸம்மில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முகம்மது சபிர் ஆகியோர் இருந்தனர். உடன் கொங்கராயகுறிச்சி ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING தூத்துக்குடி தெற்கு மாவட்டம். 07-08-2017
மஜக கோவை மாவட்ட மருத்துவ அணி மற்றும் இளைஞர்அணி நிர்வாகிகள் ஆலோசனைகூட்டம்!
கோவை.ஆக.07., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாவட்ட மருத்துவ அணி மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று மாவட்ட இளைஞரணி செயலாளர் பைசல் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட மருத்துவ அணிசெயலாளர் அபு, துணை செயலாளர் செய்யது இப்ராஹீம், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர்கள் அக்பர், சபீர், அன்சர் மற்றும் அனைத்து பகுதி கிளை மருத்துவ அணி மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பின்வருமாறு. ஆகஸ்ட்-15 அன்று நடைபெறும் மருத்துவமுகாம் மற்றும் இரத்ததான முகாமை அனைத்து நிர்வாகிகளின் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடத்துவது எனவும், மருத்துவ முகாம் நடைபெறும் வளாகத்தில் தேசியகொடி ஏற்றுவது எனவும் முடிவு செய்யப்பட்டது. தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING கோவை மாநகர் மாவட்டம். 06.08.17
நாகை தெற்கு இரட்டை மதகடி மஜக ஆலோசனை கூட்டம்..!
நாகை.ஆக.07., நாகப்பட்டினம் தெற்கு மாவட்டம், கீவளுர் ஒன்றியம், இரட்டை மதகடியில் நேற்று (06/08/2017) மனிதநேய ஜனநாயக கட்சியின் வளர்ச்சி சம்பந்தமான ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் ரியாஸுதீன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாலர் பரகத் அலி மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். அதில் இரட்டை மதகடி சகோதரர்கள் கலந்து கொண்டு ஆலோசனை செய்யப்பட்டது. பிறகு புதிதாக வந்திருந்த சகோதரர்கள் தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர். புதிய பொறுப்புக்குழு போடப்பட்டது. அதன் விபரம் வருமாறு. கிளை பொறுப்பாளர்களாக N.S.தாவூது அவர்களையும், H.M.சாகுல் ஹமீது அவர்களையும் நியமிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் இனி வரும் காலங்களில் தீவிரமாக கிளை உறுப்பினர்களை சேர்ப்பது என்றும் ஒரு மாதத்திற்க்குள் கிளை பொதுக்குழு கூட்டம் கூட்டி நிர்வாகிகளை தேர்வு செய்வது என்றும் தீர்மாணிக்கப்பட்டது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING நாகை தெற்கு மாவட்டம் 06.08.17
விவசாயிகள் வாகன பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார் மஜக பொதுச் செயலாளர்…!
திருவாரூர்.ஆக.07., காவேரி டெல்டா மாவட்டங்களை கபளீகரம் செய்யும் நோக்கோடு மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களை தொடர்ந்து, தற்போது "பெட்ரோலிய ரசாயான முதலீட்டு மண்டலத்தை" டெல்டா மாவட்டங்களில் மத்திய அரசு தொடங்கியிருக்கிறது. இதில் நாகை, கடலூர் மாவட்டங்களை சேர்ந்த 46 கடலோர கிராமங்கள் பாதிக்கப்படுகின்றன. இதனை கண்டித்தும், விவசாய நிலங்களை பாதுகாக்கும் பொருட்டும், தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் தோழர் P.R. பாண்டியன் தலைமையில் இன்று தொடர் வாகன பிரச்சார இயக்கம் தொடங்கப்பட்டது. இப்பிரச்சாரத்தை மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஆகஸ்ட் 14 வரை இப்பிரச்சாரப் பயணம் டெல்டா மாவட்டங்களில் நடைபெறவிருக்கிறது. இந்நிகழ்வில் மஜக மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், மாநில விவசாய அணிச் செயலாளர் நாகை முபாரக், திருவாரூர் மாவட்ட செயலாளர் சீனி ஜெகபர் சாதிக், நாகை தெற்கு மாவட்ட பொருளாலர் வடகரை பரக்கத் அலி, மாவட்ட விவசாய அணி செயலாளர் நத்தர்கனி மற்றும் மாவட்ட, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING திருவாரூர் மாவட்டம். 07.08.17