சேலம்.ஜன.06., மத்திய அரசு கொண்டுவரும் ஜனநாயக விரோத முத்தலாக் சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி #ஜமாத்துல்_உலாமா சார்பில் இன்றும் தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளர் #M_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் கண்டன பேருரை ஆற்றினார். இந்நிகழ்வுக்கு சேலம் மாவட்ட ஜமாத்துல் உலாமா தலைவர் அல்ஹாஜ். #TKM_அப்துஸ்ஸலாம்_மிஸ்பாஹி அவர்கள் தலைமை வகித்தார். இதில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களை சேர்ந்த தலைவர்களும், மார்க்க அறிஞர்களும் உரையாற்றினர். இதில் பல்லாயிரகணக்கானோர் திரண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_சேலம்_மாவட்டம். 06.01.2018
தமிழகம்
தமிழகம்
போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சனையை உடனே தமிழக அரசு தீர்க்க வேண்டும்..! மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA வேண்டுகோள்..!!
சேலம்.ஜன.06., இன்று சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA வருகை தந்தார். முன்னதாக கோட்டை மைதானம், நெத்திமேடு, முகமதுபுரா, கல்ரம்பட்டி ஆகிய இடங்களில் 80க்கும் மேற்ப்பட்ட வகணங்களுடன் சென்று மஜக கொடிகளை ஏற்றிவைத்தார். அதன் பிறகு மாவட்ட அலுவலகத்திற்கு சென்று மினிட் புத்தகத்தை பார்வையிட்டு கையெழுத்திட்டார். அதன் பிறகு பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால், தமிழ்நாடு ஸ்தம்பித்திருக்கிறது. பொங்கல் நேரம் என்பதால் பொதுமக்களும், வணிகர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு மீண்டும் தொழிற்சங்கங்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கைகளை செவிமடுக்க வேண்டும். இப்பிரச்சினையை தாமதிக்காமல் சுமுகமாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் பேட்டியளித்தார், பிறகு ரஜினி அரசியல் குறித்து எழுந்த கேள்விகளுக்கு பதிலளித்தார். ஆரம்பத்தில் அரசியல் நாகரீகத்தின்படி ரஜினியின் அரசியல் வருகைக்கு வாழ்த்து கூறினோம். அதன் பிறகு ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் பாஜக தலைவர்களின் கருத்துக்களுக்கும், அதன் பிறகு ராமகிருஷ்னா மடத்தில் ரஜினியின் முன்பு நடைபெற்ற உரையாடல் விடியோ பதிவுகளும் வந்த பிறகு, திராவிட இயக்க பற்றாளர்களும், தமிழ் தேசியவாதிகளும் கூறியபடி, அவருக்கு பின்னால் பாஜக இருக்கிறது என்ற
பட்டுக்கோட்டையில் சமுதாய எழுச்சி..!
பட்டுக்கோட்டை.ஜன.06., மத்திய அரசு கொண்டுவரும் ஜனநாயக விரோத முத்தலாக் சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி #ஜமாத்துல்_உலாமா சார்பில் நேற்று தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பட்டுக்கோட்டை வட்டார ஜமாத்துல் உலாமா சபை சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) சார்பில் மாநில துணைச் செயலாளர் #திருமங்கலம் #J_ஷமீம்_அஹமது அவர்கள் கலந்து கொண்டு கண்டண உரை ஆற்றினார். இந்நிகழ்வுக்கு பட்டுக்கோட்டை வட்டார ஜமாத்துல் உலாமா தலைவர் #அய்யூப்கான்_ஹஜ்ரத் அவர்கள் தலைமை வகித்தார். இதில் மஜக மாநில துணைபொது செயலாலர் #மதுக்கூர் #K_ராவுத்தர்ஷா மாவட்ட பொறுப்பு குழு தலைவர். #பேராவூரணி. எஸ்.எம்.எ.சலாம் பொறுப்பு குழு உறுப்பினர்கள் அதிரை.பைசல், அதிரை சாகுல், பட்டுக்கோட்டை குத்து ப்தீன் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பல்லாயிரகணக்கானோர் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தஞ்சை_தெற்கு_மாவட்டம். 05.01.2018
சிதம்பரத்தில் ஜமாத்துல் உலாமாவின் முத்தலாக் சட்ட எதிர்ப்பு கண்டன கூட்டம்…! மஜக இணைப் பொதுச்செயலாளர் பங்கேற்பு..!!
சிதம்பரம்.ஜன.06., மத்திய அரசு கொண்டுவரும் ஜனநாயக விரோத முத்தலாக் சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி #ஜமாத்துல்_உலாமா சார்பில் நேற்று தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்ட ஜமாத்துல் உலாமா சார்பில் சிதம்பரம் MYM பைசல் மஹாலில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) இணைப் பொதுச்செயலாளர் #K_M_முஹம்மது_மைதின்_உலவி அவர்கள் கண்டன உரை ஆற்றினார். இந்நிகழ்வுக்கு கடலூர் மாவட்ட ஜமாத்துல் உலாமா தலைவர் மெளலவி. #A_சபியுல்லா_மன்பயி_ஹஜ்ரத் அவர்கள் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ் மாநில ஜமாத்துல் உலமா சபையின் வழிகாட்டு தலைவர் A.E.M. அப்துர் ரஹ்மான் ஹஜ்ரத் , கடலூர் மாவட்ட அரசு காஜி A. நூருல் அமீன் ஹஜ்ரத், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் K.A.M. அபூபக்கர்MLA உள்ளிட்ட தலைவர்களும், சமூக ஆர்வலர்களும், மார்க்க அறிஞர்கள் உரையாற்றினர். இதில் பல்லாயிரகணக்கான மக்கள் திரண்டு மத்திய அரசின் இந்த சட்ட மசோதாவிற்கு எதிராக திரண்டு நின்றது குறிப்பிடத்தக்கது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_கடலூர்_தெற்கு_மாவட்டம் 05.01.2018
முத்தலாக் தடை சட்டத்திற்கு எதிராக நெல்லையில் கண்டன பொதுக்கூட்டம்..! மஜக மாநில துணை செயலாளர் பங்கேற்பு…!!
நெல்லை. ஜன.06., மத்திய மதவாத அரசை கண்டித்து நெல்லை ஜவகர் திடலில் ஜமாத்துல் உலாமா சபை சார்பாக அனைத்து கட்சிகள் மற்றும் இயக்கங்களை கூட்டி முத்தலாக் தடை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன பொதுக்கூட்டம் நேற்று 05.01.17 மாலை நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக மாநில துணை செயலாளர் புளியங்குடி செய்யது அலி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். குறிப்பாக பாசிசத்திற்கு எதிராக பிற்படுத்தபட்டோரும், ஒடுக்கபட்டோரும், நாத்திகர்களும், சேர்ந்து வேரறுப்போம் என்றும், முத்தலாக் தடை சட்டம் இந்திய இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்றார். தகவல் ; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_நெல்லை_மாவட்டம்